தமிழ் கலாச்சாரம் போர் அடிச்சுருச்சு… நான் முன்பை பொண்ணு… டோட்டலா மாறிய ஜோதிகா…

0
Follow on Google News

திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி கலக்கி வருகிறார். திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஜோதிகா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து அசத்தியிருந்தார். பின்னர் பாலிவுட் சினிமா பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்த ஜோதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே சென்று செட்டில் ஆகிவிட்டார். இதனை ரசிகர்கள் பலரும் ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு முழுவதுமாக குட்பாய் சொல்லிவிட்டு பாலிவுட் சினிமாவில் குதித்து விட்டார் என விமர்சித்திருந்தனர்.

பாலிவுட்டில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான சைத்தான் என்ற திரைப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவகன் உடன் சேர்ந்து ஜோதிகாவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலைவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்த ஜோதிகா அடுத்தடுத்து நிறைய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ஜோதிகா எப்போதும் இல்லாத அளவுக்கு பாலிவுட்டிற்கு சென்று தனது கிளாமரை காட்டுவதில் தயங்காமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா ஆபாச உடையில் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஜோதிகா இப்படி கவர்ச்சியில் இறங்கியதன் காரணம் தான் தற்போது ஹைலைட் நியூசாக மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா கருப்பு நிற கோட் போன்ற ஒரு உடை அணிந்து வந்திருந்தார்.

அந்த உடையில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு மேலே கோட் போன்ற சட்டை போட்டு அதில் பட்டன் கூட போடாமல் முன் அழகை அப்படியே காட்டி போஸ் கொடுத்திருந்தார். இந்த போட்டோ இணையதளத்தில் பரவி பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஜோதிகா தமிழ் சினிமாவில் நடிக்கும் போது கூட புடவையில் தான் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். ஆனால் தற்போது பாலிவுட்டிற்கு சென்று ஜோதிகா கவர்ச்சி காட்டுவதில் தான் முழு கவனத்துடன் இருக்கிறார்.

மேலும் ஜோதிகா பாலிவுட் பட வாய்ப்புக்காக தான் விருது விழாவிற்கெல்லாம் இவ்வாறு கவர்ச்சியான உடைகளில் வருகிறார் என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். பொதுவாகவே நடிகைகள் சினிமாவில் தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காக முடிந்த அளவு படத்தில் கிளாமர் காட்டுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அந்த லிஸ்டில் ஜோதிகாவும் இணைந்து விட்டார்.

தமிழ்நாட்டில் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ஜோதிகா தற்போது மும்பைக்கு சென்று தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காக பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியை காட்டி கிளாமர் அழகியாக மாறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், இது நம்ம ஜோதிகாவா? என வாயடைடுத்துப் போய்விட்டனர். மேலும் சிலர் சிலர் பாலிவுட்டிற்கு சென்றதும் உங்க வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா? என ஜோதிகாவை வசைப்பாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஜோதிகாவின் இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை ஜோதிகா மாமனார் கட்டி காப்பாற்றி வந்த மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. ஜோதிகாவின் இந்த திடீர் மாற்றம் தமிழ் ரசிகர்களால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஜோதிகா தென்னிந்திய ரசிகர்களை இழக்க போகிறார் என சிலர் கூறி வந்தாலும், இனி தமிழ் சினிமாவில் தலை காட்டுவதில்லை என ஜோதிகா முடிவு செய்துவிட்டதால் முழுமையாக பாலிவூட் கலாச்சாரத்திற்கு மாறியுள்ளார் ஜோதிகா என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..