உன் புருஷன் யோக்கியமா.? ஜோதிகாவை வெளுத்து வாங்கிய சாய் பல்லவி…

0
Follow on Google News

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜய் தேவகானுடன் சைத்தான் திரைப்படம், டப்பா கார்டல் வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தற்போது பாலிவுட் பக்கம் ஐஸ் வைக்க தமிழ் திரையுலகத்தை சாடி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது மட்டுமில்லாமல், முதலில் உன் கணவர் சூர்யா பெரிய யோக்கியமா என்று கேள்வி எழுப்பும் வகையில் சாய் பல்லவி பேசிய பேச்சு தக்க பதிலடியாக அமைத்துள்ளது.

பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா, “தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கிறது. பாலிவுட் சினிமாவில் கூட மாற்றம் வந்துவிட்டது. ஆனால் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தென்னிந்திய சினிமா இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. இம்மாதிரி படங்களில் நடிகைகள் நடித்தால் அவர்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டும், நடிகர்களை பற்றி பெருமையாக பேசிக் கொண்டும் மட்டுமே இருக்க வேண்டும். இன்னமும் இதிலிருந்து மாறாமல் அப்படியே இருக்கிறது தென்னிந்திய சினிமா” என ஜோதிகா குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் சாய் பல்லவி டாப் நடிகையாக இருந்தாலும் பிற மொழி படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார், பெரும்பாலும் சமீப காலமாக தமிழ் படங்களில் கமிட்டாகாமல் தவிர்த்து வந்தார் சாய் பல்லவி. இதற்கு காரணம் தமிழ் சினிமா துறையில் அவருக்கு நடந்த கசப்பான சில சம்பவங்கள் தான் என்று கூறப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் சாய் பல்லவிக்கு நடந்த கசப்பான சம்பவம் என்ன என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் என் ஜி கே என்கின்ற படத்தின் நடித்த போதும் சாய் பல்லவி நடித்த பல காட்சிகளை சூர்யா இயக்குனரிடம் சொல்லி வெட்டி எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது சாய் பல்லவி எப்போதும் கதைக்கு முக்கிய துவம் இருக்கும் படத்திலே கமிட்டாவர். ஆனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாய் பல்லவி ஏமாற்றப்பட்டு வந்ததால் ஒரு கட்டத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் தான் முழு திறமையை காட்டி நடித்தாலும் கூட, தன்னுடைய காட்சிகள் இடம் பெற்றால் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை விட தான் பெயர் பெற்று விடுவோம் என்பதற்காக வெட்டி எடுக்கப்படுவதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதை புறக்கணித்து வந்தார் சாய் பல்லவி. இந்த நிலையில் அமரன் படத்தில் கமிட்டான சாய்பல்லவி, அந்த படத்தின் முழுவதும் நடித்து முடித்த பின்பு தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் என்னுடைய காட்சிகள் வெட்டி எடுத்துட்டீங்களா.? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்துள்ளார்.

ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று நம்பிக்கையை கொடுத்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் சாய்பல்லவிக்கு படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும் வழக்கம்போல் தமிழ் சினிமாவில் தன்னுடைய காட்சிகள் வெற்றியெடுப்பது போன்று அமரன் படத்திலும் வெட்டி எடுக்கப்படுமா என்ற ஒரு வித சந்தேகத்துடனே அமரன் படம் ரிலீஸ் ஆகும் வரை காத்திருந்தார் சாய்பல்லவி.

ஆனால் தான் நடித்த அனைத்து காட்சிகளும் அமரன் படத்தில் இடம்பெற்று இருந்தது சாய் பல்லவிக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அமரன் பட வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து அனைத்து காட்சிகளுமே இந்த படத்தில் இடம்பெறும் வகையில் என்று ஒப்புதல் அளிக்கக்கூடிய கதாநாயகர்களும் இங்கே இருக்கிறார்கள் என்று பேசி மறைமுகமாக சூர்யாவை தாக்கி இருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கிறது என்று ஜோதிகா பேசி இருந்த நிலையில், சூர்யா உடன் என் ஜி கே படத்தில் நடித்த சாய் பல்லவி காட்சிகள் வெட்டி எடுக்க காரணமாக இருந்த ஜோதிகா கணவர் முதலில் யோக்கியமா என கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள், இந்த அறிவுரையை முதலில் கணவர் சூர்யாவிடம் சொல்லுங்க ஜோதிகா மேடம் என தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here