தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக நாடகம்… யாருக்கும் சந்தேகம் வர கூடாது… டாக்டர் சொன்ன பகீர் தகவல்..

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாகவே விஞ்ஞானம் வளர வளர மக்கள் தங்கள் வேலைகளை எளிதாக்கி கொள்வது போல், தற்போது குழந்தை பெற்றுக்கொள்வதையும் எளிதாக்கி விட்டனர். குறிப்பாக, நடிகர் நடிகைகளை சொல்லவே வேண்டாம். எங்கு திரும்பினாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் செய்திதான் அதிகளவில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

தாமே 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றுக் கொண்டால், நமது அழகு குறைந்துவிடும், பின் பட வாய்ப்புகள் வராது என, அம்மா என்ற ஸ்தானத்திற்கே செல்லாமல், போலி அம்மாவாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் இந்த லிஸ்டானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை நடிகர் நடிகைகள் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இதில் முதலில், லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் தான் பெற்றுக் கொண்டனர். இரண்டாவதாக இந்தியாவின் சூப்பர் ஸ்டாரில் ஒருவரான ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் கடந்த 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். ஷாருக்கானின் இளைய மகனான அப்ரான் கான் தான் வாடகை தாய் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தை.

இந்த பட்டியலில் மூன்றாவதாக பாலிவுட் நட்சத்திரமான அமீர்கான், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஷாத் ராவ் கான் என்கிற மகனை வாடகை தாய் மூலம் பெற்று கொண்டார். இந்திய துறையுலகில் முதன் முறையாக வாடகைத்தாய் முறையை அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். அடுத்தது பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும், சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டார்.

தற்போது இந்த லிஸ்டில் தான் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இணைந்துள்ளார்கள் என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது. தீபிகா படுகோன் கடந்த பிப்ரவரி மாதம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மூலம் அறிவித்தார். திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து தீபிகா கர்ப்பமானதால் அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதற்கு முன்பே அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்ட தீபிகா கர்ப்பமாக இருப்பதாகக்கூறி புகைப்படங்கள் வைரலான நிலையில், அவர் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது கர்ப்பத்தை உறுதிசெய்தார். இதனிடையே ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த வீடியோவில் போலீஸ் உடையில் இருக்கும் தீபிகாவிடம் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், எனவே அவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் பலர் கூறிவந்தனர்.

மேலும் கர்ப்பமாக இருந்தால் எப்படி சண்டைக்காட்சிகளில் நடிக்கமுடியும் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் சிலர் 5 மாதங்களில் இவ்வளவு பெரிய baby bump வர வாய்ப்பில்லை எனவும், தீபிகா கொஞ்சம்கூட எடை அதிகரிக்கவில்லை, எனவே அது செயற்கையான baby bump எனவும் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் சமீபத்தில் கல்கி படத்தின் புரமோஷனுக்கு வயிற்றில் குழந்தையுடன் தீபிகா கலந்து கொண்டார்.

ஆனால் கர்ப்பமாக இருக்கும் போதும் அவர் ஹை ஹீல்ஸ் அணிந்தது குறித்தும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் தான் இவர், கர்ப்பிணி போல் நடிப்பதாகவும் தீபிகாவின் வயிறு கர்ப்பிணி வயிறு போல் இல்லை, இது போலி வயிறு என்றும் கூறிவருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவரின் வயிறு வித்தியாசமாக தெரிகிறது, தீபிகா உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லை, கர்ப்பமாக இருப்பது போல் நடித்துவிட்டு, பின்பு வாடகை தாய் மூலம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் இதற்கு பிரபல IVF நிபுணரான டாக்டர் கௌரி அகர்வாலும் பகீர் தகவலை கூறியுள்ளார். அவர் தீபிகாவின் கர்ப்பம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் தீபிகா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், அவரின் வயிறு போலி கர்ப்ப வயிறாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லியிருக்கிறார். மேலும் இந்தியாவில் IVF செய்வதற்கு பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.

தற்போது தீபிகா படுகோனுக்கு 38 வயதாகிறது. தற்போதைய வாழ்க்கை முறையால் இந்த வயதில் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் குறைவு. அதனால் தீபிகா படுகோன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தான் ரசிகர்கள், தீபிகா படுகோனே உண்மையிலேயே கர்ப்பமாகத்தான் இருக்கிறாரா அல்லது கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கிறாரா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.