நடு தெருவுக்கு வந்த பானுபிரியா… சம்பாரிச்ச மொத்த பணமும் போச்சு…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் பானு ப்ரியா. பானுப்பிரியா நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞரும், இவர் சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மேலும், இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் இவர் கண்ணிற்கு மட்டும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

பானுப்பிரியா மற்றும் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல இயக்குனர்களும் பானு பிரியாவை வைத்து போட்டி போட்டு படங்களை இயக்கினர். ஒவ்வொரு படத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 80- 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடிக்க தொடங்கி இதுவரை இவர் 150 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். தன்னுடைய சமகாலத்தில் நாயகியாக நடித்த பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். இதனிடையே இவர் 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்.

அதன் பின்னர் இருவருக்கும் அபிநயா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது பானுப்ரியா சீரியலிலும், படங்களிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் பானுப்ரியா ஒரு பிரபல நடிகரை நம்பி நடு ரோடு வந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காலத்தில் பானுப்பிரியா மற்றும் விஜயகாந்துக்கு இடையே ஏற்பட்ட படங்கள் கெமிஸ்ட்ரியில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதனால் பானுப்ரியா படத்தில் முதலீடு செய்ய நினைத்துள்ளார். எனவே விஜயகாந்தை வைத்து பானுப்பிரியா படம் ஒன்றை தயாரித்து உள்ளார், அந்த படம் தான் காவியத்தலைவன். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த சூழ்நிலையில் பெரும் நஷ்டம் அடைந்து பல சொத்துக்களை இழந்துள்ளார் பானுப்பிரியா.

அதுமட்டுமின்றி பானுப்ரியா சினிமாவின் மூலம் தான் சம்பாதித்த வருமானத்தை அவரின் தம்பி மூலம் விளம்பரப்படங்களில் முதலீடு செய்துள்ளார். பின்பு தொழிலில் பெரிய அளவில் வெற்றி பெறாததால் நஷ்டம் அடைந்தனர். அதன்பிறகு மிகப்பெரிய இழப்பீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் பானுப்பிரியா. அதன்பின் தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் பானுப்பிரியா.

இவரது நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் வரவேற்பைப் பெற்றார். தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகத்தில் பேட்டி அளித்த பானுப்ரியா தனக்குக் கடந்த சில ஆண்டுகளாக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் என்னுடைய நினைவாற்றல் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடனத்திற்காக நான் செய்யும் பயிற்சியைக் கூட தற்போது நிறுத்தி விட்டேன். ஓராண்டுக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிப்பதாக ஒப்பந்தம் போடுகிறேன். சில நேரங்கள் சில மனிதர்கள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குநர் ஆக்சன் என்று சொன்ன பிறகும் வசனம் ஞாபகத்திற்கு வரவில்லை அப்படியே நிலை தடுமாறி நின்றேன்” எனத் தெரிவித்தார்.