அறந்தாங்கி நிஷாவை ஏர்போட்டில் சீண்டிய வாலிபர்… தரமான சம்பவம் செய்து மூக்குடைத்த அறந்தாங்கி நீஷா…

0
Follow on Google News

உருவ கேலி என்பது எல்லா இடத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலர் இந்த மாதிரி கேள்விகளுக்கு அசால்டாக பதிலடி கொடுத்துவிட்டு போய்விடுவார்கள், அதுவே பலர், அதை ஈசியாக கடந்து செல்ல முடியாமல், அதை நினைத்து நினைத்து வேதனைப்படுவார்கள். தற்போது இதே போல் ஒரு சம்பவத்தில் தான் அறந்தாங்கி நிஷாவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவாக வெளியிட்டு, தன் வேதனையை சொல்லியதோடு, இனியும் யாரும் இப்படி பேசக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வீடியோ பதிவை வெளியிடுகிறேன் என்று, தன்னை விமர்சித்தவரை லெப்ட் ரைட் வாங்கி உள்ளார். அறந்தாங்கி நிஷா ஏர்போர்ட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு நபர், நீங்கள் விஜய் டிவி நிஷாவா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அறந்தாங்கி நிஷாவும் ஆமாம் என்று சொல்லி இருக்கிறார், மீண்டும் அவர் நீங்க அறந்தாங்கி நிஷாவா என்று கேட்டு அதிர்ச்சியோடு பார்ப்பது போன்றே பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அறந்தாங்கி நிஷா என்ன ஆச்சு, ஏன் இப்படி கேட்கிறீங்க என்று கேட்க, நாங்கள் இவ்வளவு நாளா எப்படி எல்லாம் ஏமாந்து போயிருக்கிறோம், டிவியில் உங்களை அவ்வளவு கலரா காட்டுறாங்க, ஆனால் நிஜத்தில் நீங்க இவ்வளவு கருப்பா இருக்கீங்க, இப்படி இருக்கிற உங்களை அந்த டிவில அவ்வளவு அழகா காட்டுறாங்க என்று மீண்டும் மீண்டும் அந்த நபர் அறந்தாங்கி நிஷாவின் நிறத்தை வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.

அதற்கு அறந்தாங்கி நிஷா கருப்பாக இருப்பதில் ஒன்றும் அசிங்கம் இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டதாக கூறினார். ஆனால் உள்ளுக்குள் அதிகமாக கோபம் வந்தது, இருந்தாலும் அதை வெளியே காட்டவில்லை, அதற்கு காரணம் யாரையும் உணர்வு ரீதியாக காயப்படுத்தக் கூடாது என்று எனக்கு தெரியும், நானும் பல இடங்களில் இப்படி காயப்பட்டு இருக்கிறேன், அதனால் அதை நான் இன்னொருவருக்கு செய்யக்கூடாது என்று தான் அங்கிருந்து வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர், நம் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இந்த மாதிரி மக்களின் மனநிலை இன்னும் மாறவில்லை, இவ்வளவு கேவலமான மனநிலையோடு இருப்பவர்கள் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் மன வேதனையோடு பேசி இருந்தார். அறந்தாங்கி நிஷாவின் மனவேதனையை புரிந்து கொண்ட பலரும் அவருக்கு ஆறுதலாக தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, அறந்தாங்கி நிஷா தன்னுடைய சொந்த பணத்திலிருந்து, புயலால் ஏற்பட்ட மழை பாதிப்பின் போது பல ஏழைகளுக்கு உதவி செய்து இருக்கிறார். அதுபோல ராகவா லாரன்ஸின் மாற்றம் என்ற சேவையில் இணைந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார். ஆனாலும் ஒரு சிலர் அவருடைய நல்ல குணத்தை புரிந்து கொள்ளாமல் வெளியே இருக்கும் நிறத்தை வைத்து இவ்வளவு கேவலமாக பேசுவது தவறு என்று பலரும் அந்த நபருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here