அம்பிகா உடன் ஒன்றாக சுற்றும் இவர் அம்பிகா கணவர் இல்லை… வேறு யார் இவர்.?

0
Follow on Google News

நடிகை அம்பிகாவின் இரண்டாவது கணவர் ரவிகாந்த் என்று இணையத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், நடிகர் ரவிகாந்த் தனக்கு அம்பிகாவுக்கு உள்ள நெருக்கம் குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் பேட்டி ஒன்றில் அம்பிகா குறித்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை அம்பிகா எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . தமிழ் மட்டுமின்றி கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவரது தங்கையின் நடிகை ராதாவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் அம்பிகாவின் ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

அம்பிகா ஹீரோயின் ஆக நடித்த பல படங்கள் ஹிட் ஆகவே அந்த சமயத்தில் வரிசையாக நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்தில், பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. திருமணத்திற்கு பிறகு அம்பிகா சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஆனால் சில ஆண்டுகளில் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னர் நடிகை அம்பிகா மீண்டும் சினிமாவில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சங்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி, அருவி போன்ற சீரியலில் நடித்து கலக்கியா அம்பிகா இப்போது மல்லி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். அம்பிகா அவரது முதல் கணவர் பிரேம்குமாரை விவாகரத்து செய்ததும் நடிகர் ரவி சாந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன.

அது மட்டுமல்லாமல் அம்பிகாவின் விக்கிபீடியாவில் கூட அவருடைய இரண்டாவது கணவர் ரவி காந்த் என்றும் 2000 ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து நடிகர் ரவிகாந்த் பேட்டி ஒன்றில் பேசும்போது, “அம்பிகாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். நாங்க ரெண்டு பேருமே பக்கத்து பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தோம்.

பக்கத்து வீடு என்பதால் சூட்டிங்க்கு போகும் போது ஒரே காரில் தான் போவோம். நான் இதுவரை நான்கு மொழிகளில் அம்பிகாவோடு 16 படங்களில் நடித்திருக்கிறேன். எல்லா படத்தில்யும் நாங்கள் கணவன் மனைவியாக தான் நடித்திருக்கிறோம். படப்பிடிப்பில் கூட அனைவரும் கணவன் மனைவி வந்துட்டாங்களே சூட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க என்று சொல்வார்கள்.ஆனால் இது பற்றி தெரியாத பலரும் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் இதை யாரும் நம்ப கூடாது. பயில்வான் ரங்கநாதன் கூட அம்பிகா பற்றி தவறாக பேசியிருந்தார். ஒரு பேட்டியில் பயில்வான் பேசும்போது அம்பிகாவின் கணவர் ஸ்ரீதர் என்று தவறாக சொல்லி இருந்தார். அதை பார்த்து நான் அவருக்கு போன் போட்டு அம்பிகாவின் கணவர் பெயரை நீங்க தப்பா சொல்லி இருக்கீங்க. அவர் பெயர் பிரேம் குமார் என்று விளக்கம் கொடுத்தேன்.” என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.