உச்சத்திற்கு ஆசைப்பட்டு… ஒவ்வொருவராக நம்பி ஏமாற்றம் அடைந்த அமலாபால்… கண்கலங்க வைக்கும் அமலாபால் வாழ்க்கை…

0
Follow on Google News

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அமலாபாலை, அமலாபால் குறித்து அவர் பகிர்ந்த பல்வேறு விஷயங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தாலும், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் தமிழில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

மைனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் மற்றும் ஆடை என வரிசையாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, அமலாபால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், முன்பு விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

நடிகை அமலாபால் 2014 ஆம் ஆண்டு தலைவா படத்தின் இயக்குனரான A.L விஜய்யை மணம் முடித்தார். ஆனால், மூன்று ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவர் இடையே ஏற்பட்ட மணக்கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு, முழுவதுமாக படங்களில் நடிப்பதற்கு களமிறங்கிய அமலா பாலுக்கு அடுத்தடுத்து ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்தது.

இருப்பினும், அமலா பாலுக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்த நிலையில், அண்மையில் அவரது நண்பரான ஜகத் தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அமலாபால் திரைத்துறையில் கடந்து வந்த வழிகள் வேதனைகள் பற்றி முக்கிய பிரபலம் தெரிவித்துள்ளார். அதில் அமலா பாலுக்கு மட்டும் இல்லை திரைத்துறைக்கு வரும் அத்தனை பெண்களும் வெளியில் சொல்ல முடியாத ரணங்களை அனுபவித்து இருப்பார்கள். ஆனால் அமலாபால் அவர்களை விட அதிகமான வலிகளை அனுபவித்திருக்கிறார். ஏனெனில் அமலாபால் அனைவரையும் எளிதாக நம்பி விடுவார்.

அவரது இந்தப் பண்பை வைத்து பலரும் எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவருக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை, அவரது தவறுகளை சுட்டிக்காட்டி தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், முதல் கணவரை விட்டு பிரிந்தார்.

அதேபோல், 2019 ஆம் ஆண்டில் வெளியான ஆடை படத்திலும் அமலாபாலை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ஆடை படத்தில் அமலாபாலை நடிக்க வைக்க, ஏதேதோ ஆசைகள் காட்டி அவரை நடிக்க வைத்துள்ளனர். இந்த படத்தில் நடித்தால் உங்கள் மார்க்கெட் உச்சத்திற்கு எகிறிவிடும் என்றெல்லாம் கூறி அவரை நம்ப வைத்து நடிக்க வைத்தனர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இப்போது அமலா பாலின் படங்களும் அதிகம் வருவதில்லை. இப்படித்தான் பலரும் அமலாபாலை நம்ப வைத்து மோசம் செய்துள்ளனர் என்று வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் அமலாபால் வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.