6 மாதத்தில் குழந்தை வேண்டுமா.? எப்படி டேட்டிங் செய்ய வேண்டும் என நடிகை அமலாபால் கொடுத்த டிப்ஸ்…

0
Follow on Google News

நடிகை அமலாபால், மைனா என்ற படத்தின் மூலம் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் இவர் விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தான் இவர் பல சர்ச்சைகளிலும் சிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, இவர் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் அவரின் திருமண வாழ்க்கையும் சர்ச்சை தான்.. இப்படி முன்னணி நடிகையாக இருந்து, சர்ச்சை நடிகையாக மாறிய அமலாபால், தன் குழந்தை பிறந்த நிகழ்வு பற்றி பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதலில், இயக்குனர் ஏ.எல் விஜய்யை நடிகை அமலாபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால் இவருக்கு ஏ எல் விஜய் தான் முதல் திருமணம் என்று பார்த்தால், இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை, ஏற்கனவே திருமணம் செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர்‌ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது பெரும் பேசு பொருளானது.

பின்னர் அந்த சர்ச்சையெல்லாம் ஓய்ந்த பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதோடு நடிகை அமலாபால் கடந்த ஜனவரி மாதத்தில், கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் நடிகை அமலா பால் கர்ப்பமானதில் இருந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக காணப்பட்டார்.

தன்னுடைய கணவருடன் மற்றும் வயிற்றில் இருக்கும் தன்னுடைய குழந்தையுடன் அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து, வயிற்றில் குழந்தையோடு டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை அமலாபால் அறிவித்திருந்தார். அப்போதே ரசிகர்கள், எப்படி பார்த்தாலும் ஜனவரி மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தாலும், ஜூன் மாதம் என்றால் ஆறு மாதத்திலேயே குழந்தை பிறந்து விட்டதா என்று சந்தேகித்தனர்.

இந்நிலையில் அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் நடிகை அமலாபால் கூறிய தகவல்தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குழந்தைப் பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த போதிலும், திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து நேர்காணல்களிலும் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். இந்நிலையில், அப்போது பேட்டியளித்த நடிகை அமலாபால், திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமானேன் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

மேலும் எனது முதல் திருமணத்தில் மோசமான அனுபவம் ஏற்பட்டதால், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் டேட்டிங் செய்த பிறகுதான் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், ஜெகத்தை சந்தித்த பிறகு எல்லாம் மாறியது. நான் அவருடன் பழக ஆரம்பித்ததில் இருந்தே என் மகன் எனக்குள் வளர்ந்து விட்டான் என ஒரே போடாக போட்டு உடைத்து விட்டார்.

கடந்த ஆண்டு நடிகை அமலாபால், தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக கோவா சென்றிருந்தபோது ஜகத்தின் வில்லாவில் தங்கியிருந்தார். அமலாபால் கோவாவில் வந்திறங்கிய உடனேயே அவர் மீது காதல் கொண்டதாக ஜெகத் முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் டேட்டிங் செய்த ஒரு மாதத்தில் அமலாபால் கர்ப்பமானதாகவும், அதனால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.