நடிகை ஆலியா மானசா பிரமாண்ட பங்களா… அவருடைய ஒரு நாள் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.?

0
Follow on Google News

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இந்த தொடரின் சீரியலின் மூலம் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு பின் மீண்டும் கர்ப்பமான ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் ‘இனியா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் டாப்பிலும் இந்த சீரியல் வந்துவிட்டது. இப்படி இருவரும் பிசியாக நடித்து வந்தாலும் குடும்பம், குழந்தை, கேரியர் என்று பிசியாக இருக்கிறார்கள்.

அதோடு இவர்களிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கிறது. மேலும், இவர்கள் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஃபிளாட் ஒன்று வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னையில் சொந்தமாக தனியாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவர்கள் தங்களின் கனா வில்லா ஒன்றை கட்டி இருக்கிறார்கள்.

1.5 bhk வீட்டில் ஆல்யா, சஞ்சீவ், அவரது தாய், தம்பி குழந்தைகள் அனைவரும் வசித்து வந்த நிலையில், ஆசை ஆசையாக கட்டிய வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு சின்னத்திரை நண்பர்கள் அனைவரையும் அழைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். கோயம்புத்தூரில் இருந்த சொந்த வீட்டை அப்பாவோட மருத்துவ செலவுக்காக வித்துட்டு, 4 லட்சத்தோடு சென்னை வந்து ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போ எங்க புது வீட்டுக்கு என் அம்மா அப்பா பேரு வச்சுருக்கோம் என்று நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

இந்நிலையில், ஆல்யா மானசா அளித்துள்ள பேட்டியில், ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தோம். இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம். இது எங்களின் கனவு வீடு, சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை முழுக்க முழுக்க தான் லோனில் தான் கட்டியுள்ளதாகவும் மானசா பேசி இருந்தார்.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு “இனியா” என்ற நாடகத்தில் இவர் நடித்து வந்த பொழுது, ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20,000 முதல் 25,000 வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் ஆல்யா மானசா. தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 50,000 முதல் 60,000 வரை அவர் சம்பளம் வாங்குவதாக அந்தப் பேட்டியில் கூறினார்.