மாமியாருடன் உச்சக்கட்ட சன்டை…. வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்… விவாகரத்தா.?

0
Follow on Google News

மாமியார் மருமகள் பிரச்சனை என்பது தொன்று தொட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காலம் காலமாக பல சீரியல்களிலும் மாமியார் மருமகள் மோதல்களை வைத்தே கதை நகர்த்தப்படுகிறது.எவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொண்டாலும் மாமியார் அம்மாவாகி விட முடியாது என்பதை பலரும் உணர்ந்து இருப்பார்கள். இந்த விஷயத்தில் உலக அழகி மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆம், நடிகை ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனை பிரிந்து அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாகவும், இவர்களின் பிரிவிற்கு அபிஷேக் பச்சனின் தாயார் ஜெயா பச்சன் தான் காரணம் என்றும் சமீப காலமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் உலக அழகிக்கு இந்த நிலைமையா என்று பலரும்கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு, இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பழமொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இயக்குனர் மணிரத்தினத்தின் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்த இவர் 1999 ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டில் இந்த ஜோடி பிரிந்தது. அதைத்தொடர்ந்து இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து வந்த இவர், 2007-ல் மணம் முடித்தார்.இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்.

சுமார் 15 ஆண்டுகளாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் தம்பதியினர் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. இருப்பினும், ஐஸ்வர்யா ராய் கணவருடன் சண்டை போட்டுவிட்டு புகுந்த வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சொல்லப்போனால் இந்த தம்பதிக்குள் சமீப காலமாகவே பிரச்சனை இருந்து வருவதாகவும், ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.இப்படியான நிலையில் மாமியார் பிரச்சனை தலை தூக்கியதால் பிரச்சனை பெரிதாகி விவாகரத்து வரை சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் ஐஸ்வர்யா ராய் தங்கள் தாய் வீட்டிற்கு செல்லும் முன்பு, நான் முக்கியமா இல்லை உன் அம்மா முக்கியமா என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மாமியார் மருமகள் பிரச்சனைக்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அபிஷேக் பச்சன் தனியாக வீடு கட்டி குடியிருப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.எல்லோர் வீட்டிலும் நடப்பது போல உலக அழகிக்கும் நடந்து வருகிறது என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் அபிஷேக் பச்சன் தெளிவான முடிவு எடுத்தால் மட்டுமே இந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்