நான் ஒரு பெண்ணின் தாய்… என்கிட்ட இப்படி செய்யலாமா.? கண்கலங்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்…

0
Follow on Google News

எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் தான். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் இன்றுவரையிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தற்போது பாலிவுட்டிலும் டாப் நடிகையாக இருக்கிறார்.

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய், 2007ஆம் ஆண்டு, ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண்ணும் இருக்கிறார். இந்நிலையில் தான் சமீபகாலமாக ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் விவாகரத்து என்ற தகவல் அதிகளவில் பரவி வந்ததையடுத்து, இதற்கு ஐஸ்வர்யா ராய் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு உலகமே வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டத்தின் உச்சத்தில் திருமணம் செய்து வைத்தார். அதேபோல் இந்த திருமணத்திற்கு, இந்தியாவின், பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை உள்ள பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் குடும்பமும் வந்திருந்தது. அப்படி கலந்து கொண்ட இந்த அம்பானி வீட்டு திருமணத்தால் தான் தற்போது மீண்டும், ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை, சோசியல் மீடியாவில் பூகம்பமாக வெடித்துள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சேர்ந்து தனியாக திருமணத்திற்கு வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன், தன்னுடைய அப்பா, அம்மா சகோதரி உடன் தனியாக வந்திருந்தார்.

இருவருமே தனித்தனியாகத் தான் போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள். இப்படி கணவன் மனைவி இருவரும் தனித்தனியே வந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியதுள்ளது. இதை பார்த்த பலரும், இவர்கள் இருவரும் பிரிய போகிறார்களா? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்டு, இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள் என்று கூறிவந்தனர்.

அதே போல் இன்னொரு குரூப், ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் இணைந்து விட்டார் என, சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா போன்ற செய்திகளும் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த செய்திகளை பார்த்து பொங்கி எழுந்த நடிகை ஐஸ்வர்யா ராய், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை, அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணை குறித்து இப்படியா பேசுவது, புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அறுவெறுப்பாக உள்ளது என்று பதிலடி கொடுத்து, விவாகரத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.