ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து பின்னணி என்ன.? இது தான் காரணமா.?

0
Follow on Google News

கடந்த சில வாரங்களாகவே ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா என, இருவரின் Divorce குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவையே ஆட்டி படைத்து வருகிறது. சில வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனின் குடும்பத்திற்கும் ஒத்துவரவில்லை என்றும், இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றும், விவாகரத்துக்கு என்ன காரணம் என்ற பகீர் தகவலும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதிகள், இணைந்து வராமல், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் சேர்ந்து தனியாகவும், அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா, சகோதரியுடன் சேர்ந்து வந்திருந்தார். மேலும் இருவரும் தனித்தனியாக தான் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இப்படி இருவரும் தனித்தனியே வந்ததால் தான், இவர்களின் விவாகரத்து சர்ச்சை புகைய ஆரம்பித்தது.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் அபிஷேக் பச்சன் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல, விவாகரத்து சம்பந்தமான ஒரு போஸ்ட்க்கு லைக் போட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனால் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப்போவது உறுதி என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில்தான் இவர்களது விவாகரத்துக்கு முக்கிய காரணமே, அமிதாப்பச்சனின் மகனாக அபிஷேக் பச்சன் இருந்தாலும், அவரின் தந்தையை போல் சினிமாவில் அபிஷேக் பச்சனால் வெற்றி பெற முடியவில்லை,

ஆனால் மகன் இப்படி இருக்கும்போது, மருமகள் ஐஸ்வர்யா ராய் உச்சத்தில் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படங்களை பற்றியும், அவரைப் பற்றியும், பொது வெளியில் பேசுவதை அமிதாபச்சன் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருவது குடும்பத்திற்குள் விரிசலை ஏற்படுத்தியதோடு, குறிப்பாக ஐஸ்வர்யா ராய் ரன்வீர் கப்பூருடன் இணைந்து, ஏ தில் ஹை முஷ்கில் என்ற படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்தது குடும்பத்தில் ஒரு பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் அபிஷேக் பச்சனின் அக்காவான ஸ்வேதாவுக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆராத்யாவை சுத்தமாக பிடிக்காது என்றும், ஐஸ்வர்யா மேல் இருக்கும் பொறாமை தான் இவர் இப்படி நடந்து கொள்ள காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அனைவரின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து சொல்லும் ஸ்வேதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா பிறந்த நாளுக்கு ஒருமுறை கூட வாழ்த்து சொல்லியது கிடையாதாம். இப்படி மொத்த குடும்பமும் ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக இருப்பதால் தான், இவர் தனது மகளுடன் தனியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் அமிதாப்பச்சனும், நடிகை ரேகாவும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி 1980 காலகட்டத்திலேயே வலம் வந்தது. திருமணத்திற்கு பிறகும் சில வருடங்கள் அமிதாப்பச்சனும், ரேகாவும் தொடர்ந்து காதலித்துக் கொண்டிருந்ததால், ரேகாவுக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே அதிகளவு சண்டை வரும். மேலும் ரேகாவை ஜெயா பச்சனுக்கு சுத்தமாக பிடிக்காது. அப்படி இருக்கையில், தற்போது நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது இவர்களுடைய குடும்பத்திற்கு பிடிக்கவில்லை.

இருப்பினும் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் வேண்டுமென்றே நடிகை ரேகாவுடன் நெருக்கம் காட்டி, கட்டிப்பிடித்து உறவாடியது அபிஷேக் பச்சன் குடும்பத்தை கோபமடைய வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் நடிகை ரேகாவும், ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.