நயன்தாரா – விக்னேஷ் சிவன் மோதல்…. திருமணம் முடிந்த மூன்றே நாளில் வெடித்த பிரச்சனை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஏழு வருடமாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா, நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் நட்பாக நெருக்கி பழகினார். ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நயன்தாரா மனஉளைச்சலில் இருந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் அன்பாக பாசத்துடன் பேசியது நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்தது.

இவர்களின் நட்பு பின் காதலாக உருவானது, இருந்தும் ஏற்கனவே இரண்டு பேர் தன்னை ஏமாற்றியதால் இரண்டு முறை காதலில் தோல்வி கண்ட நயன்தாரா முன்றாவது காதல் ஆரம்பத்தில் விக்னேஷ் சிவனை முழுமையாக நம்பவில்லை. அதே போன்று ஏற்கனவே இரண்டு முறை காதலில் இருவரையும் கழட்டி விட்டது போன்று நம்மையும் கழட்டி விட்டுவிடுவார் நயன்தாரா என்கிற சந்தேகம் விக்னேஷ் சிவனுக்கு இருந்து வந்தது.

நாளடைவில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக ஒன்றாக திருமணத்துக்கு முன்பே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும், இருவருக்கும் இடையில் சிறு சிறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. நயன்தாராவை காதலித்து கொண்டிருக்கும் போதே மற்ற நடிகைகளுடன் நெருக்கமாக விக்னேஷ் சிவன் இருந்த தகவல் நயன்தாரா கவனத்துக்கு வர, இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பின்பு சமரசம் நடந்த சம்பவம் கூட நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தை துபாயில் முதலீடு செய்து வந்தார். நயன்தாரா புதிய படங்களில் நடிக்க சம்பளம் பேசுவது, கால் சீட் ஏற்பாடுகள் செய்வது என நயன்தாராவின் அணைத்து வேலைகளை கவனித்து வந்த விக்னேஷ் சிவன், துபாயில் நயன்தாரா பல கோடி முதலீடு செய்து தொழில் தொடங்கும் முன்பு, இது குறித்து விக்னேஷ் சிவனிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். விக்னேஷ் சிவனும் நல்ல முடிவு என தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை நயன்தாரா உடன் இணைந்து செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அணைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிறுவனத்தில் தன்னையும் ஒரு பாட்னராக நயன்தாரா இணைப்பார் என எதிர்பார்த்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாரா அதை செய்யவில்லை, அப்போதே விக்னேஷ் சிவன் கேட்ட போது திருமணத்துக்கு பின்பு பார்த்து கொள்ளலாம் என்று தட்டி கழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் முழுமையாக விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் தற்பொழுது திருமணம் முடிந்த மூன்றாவது நாளில், துபாயில் முதலீடு செய்துள்ள தொழில் நிறுவனத்தில் தன்னையும் ஒரு பாட்னராக இணைக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு நயன்தார மறுத்துள்ளார். இப்போது கூட என் மீது நம்பிக்கை இல்லையா என விக்னேஷ் சிவன் கேட்க, சில நாட்கள் ஆகட்டும் பார்க்கலாம் என நயன்தாரா தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

நோ… ஹனிமூன்… நயன்தாரா அதிரடி முடிவு… சோகத்தில் விக்னேஷ் சிவன்….என்ன பிரச்சனை தெரியுமா.?