உங்கட்ட இல்லாத பணமா.? மீண்டும் மக்களை சுரண்ட வரும் கோடிகளில் புரளும் நடிகர்கள்… மக்களே உசார்…

0
Follow on Google News

நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருக்கும் போது நடிகர் சங்கம் கட்டிடம் நன்றாக தான் இருந்தது, இந்த நிலையில் அடுத்தடுத்து நடிகர் சங்கம் பொறுப்புக்கு வந்தவர்கள் அந்த கட்டிடத்தை இடித்து நாசம் செய்து விட்டார்கள் என்றே சொல்லலாம், இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்ற பின்பு நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்தார்கள், அப்பவே அதை கட்ட ஆரம்பித்தால் இப்பொழுது முடித்து இருக்கலாம், இவ்வளவு செலவு கூட ஆகி இருக்காது. அதையும் அந்த நேரத்தில் கோட்டை விட்டுவிட்டனர்.

அப்போது கட்ட ஆரம்பித்து இருந்தால் கூட 20 கோடிக்குள் கட்டி முடித்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது 40 கோடிகள் செலவழித்தால் தான் அந்த கட்டிடத்தை முழுமையாக கட்ட முடியும் என்று மாறியது. அதனைத் தொடர்ந்து இந்த கட்டிடத்தை கட்டினால் தான் திருமணம் செய்து கொள்வேன் நடிகர் விஷால் பல சவால்களை விடுத்தும் வந்தார்.

ஆனாலும் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த திருமணம் பாதியிலும் நின்று போனது. இந்நிலையில் தற்போது விஷால் மீண்டும் ஒரு சவாலை விடுத்துள்ளார். கடந்த வாரம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எப்போது கட்டடப் பணிகள் நிறைவடையும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் கூட்டம் முடிந்ததும் அதுகுறித்துப் பேசியிருக்கின்றனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “அன்னைக்கு அந்தத் தேர்தல் நடக்கலைன்னா கண்டிப்பா எங்கள் கட்டடத்துல இந்த பொதுக்குழு நடந்திருக்கும். பரவாயில்லை, கூடிய சீக்கிரம் அது நடக்கும். அதுக்கான ஒப்புதல் கொடுத்து இருக்காங்க. உறுப்பினர்கள் இரண்டாவது முறை எங்களைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம், ‘அவங்களுக்கு எங்க மேல இருக்குற நம்பிக்கைதான்’.

அடுத்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதைத் தாண்டி நிறையச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், எங்களுக்கு இருக்கிற ஒரே பிரச்னை நிதிதான். நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்தது பிறகு தான் எனக்கு திருமணம். அந்த கட்டிடத்திலேயே எனக்கு திருமணத்தை வைக்கிறோம்.” என்று கூறினார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் விஷாலுக்கு பல ட்ரோல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்தினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடம் வசூலிக்கலாம் என்று ஒரு கேவலமான யோசனையை முன்னிறுத்தினர் என வலைபேச்சு பிஸ்மி தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நடிகர்கள் வாங்கும் 100 கோடி சம்பளத்தில் யாராயினும் மூவர் சேர்ந்தால் கூட எளிதாக அந்த கட்டிடத்தை கட்டி முடித்து விடலாம்.

விஜய், அஜித், கமல், ரஜினி போன்றவர்கள் மனது வைத்தால் எளிதாக கட்டிடத்தை முடித்து விடலாம். ஆனால் விஷால் இதில் ஈகோ பார்ப்பதாக தெரிகிறது. அதாவது இப்பொழுது உதாரணமா அஜித், ஐந்து கோடிகள் கொடுத்தார் என்றால் நாமும் அதை செய்ய வேண்டும் என்று ஒரு ஈகோ பிரச்சனை உருவாகும். இதனாலையே நடிகர் சங்கம் கட்டிடம் இழுபறியில் இருக்கிறது.

மொத்தத்திற்கும் ஒவ்வொருத்தரின் ஈகோ பிரச்சனை தான் இதற்கு காரணம். வரையறுக்கப்பட்டுள்ள உச்ச நட்சத்திரங்கள், அடுத்த கட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரிவு டொனேஷனை வாங்கி கட்டினால் தான்இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.” என்று பேசியுள்ளார்.