இறந்தவர் பணத்தை ஏப்பம் விடும் நடிகர் விஷால்… கண்ணீர் விட்டு கதறும் பணம் கொடுத்தவர் மனைவி..

0
Follow on Google News

நடிகர் விஷால் மீது தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நடிகர் சங்கம் பொதுச் செயலாளராக பெறுப்புக்கு வந்த பின்பு, நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டுவதற்கு, மலேசியாவில் நட்சத்திர நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை, மற்ற வேலைகளில் ஈடுபட்ட வந்த காண்ட்ராக்டர்களிடம் விஷால் அவருடைய நெருங்கிய நண்பர் ரமணா மூலம் கமிஷன் அடித்ததாக குற்றசாட்டுகள் கூட எழுந்தது.

மேலும் பலரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மதுரை அன்புசெழியனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த விஷால், பின்பு லைக்கா நிறுவனத்திடம் அவருடைய புதிய படம் தொடர்பாக சில ஒப்பந்தம் செய்து கொண்டு. லைக்காவிடம் பணத்தை பெற்று அன்புசெழியன் கடனை அடைத்தார். ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தம் படி அவர் நடக்கவில்லை.

இதனை தொடர்ந்து விஷால் மீது லைக்கா நிறுவனம் கேஸ் போட்டது. இப்படி தொடர்ந்து நாணயம் இல்லாமல் நடந்து வரும் விஷால் இறந்தவர் ஒருவர் பணத்தை ஏப்பம் விடும் சம்பம் அரங்கேறியுள்ளது. நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான படம் சின்னத்தம்பி. இந்த படத்தின் தயாரிப்பாளர் பாலு. இவர் கொரோனா தொற்று காரணமாக மறைந்துவிட்டார். இவர் மறைவதற்கு முன்பு நடிகர் விஷால் வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

அதே போன்று இயக்குனர் கெளதம் மேனனை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அப்போது விஷால் தனக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிவித்து படம் தொடங்குவதற்கு முன்பே பணம் கேட்டுள்ளார். படத்தில் நடிக்கும் போது வாங்கிய தொகையை கழித்து கொள்ளலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஷாலுக்கு ரூபாய் 7 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பாலு.

அதே போன்று இயக்குனர் கவுதம் மேனன் அவருக்கும் பணம் கஷ்டம் இருப்பதாக தெரிவிக்க அவருக்கு ரூபாய் 4 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் பாலு. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக பாலு மரணம் அடைத்தார். இதனை தொடர்ந்து பாலு தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்து அவர் குடுப்பத்திற்கு நல்ல லாபத்தை பெற்று தருவேன் என நடிகர் விஷால் உறுதியளித்தார். ஆனால் அதற்கான வேலைகளில் அவர் இதுவரை தொடங்கவில்லை.

மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி தன்னுடைய கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி விஷாலிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. இதனால் தன்னுடைய கணவர் பாலுவிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் விஷால் மற்றும் கவுதம் மேனன் இருவர் மீதும் புகார் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் பாலு அவர்களின் மனைவி என்று கூறப்படுகிறது.

மேலும் கணவர் கொடுத்த பணத்தை பெற்று தர வலியுறுத்தி சினிமா துறையை சேர்ந்த முக்கிய புள்ளிகளிடம் கண்ணீர் விட்டு பாலு மனைவி அழுது வருவதாகவும் கூறப்படுகிறது. மறைந்த தயாரிப்பாளர் பாலு, பல இடங்களில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் இருவர் பற்றியும் நல்ல விதமாக தான் பேசி வந்துள்ளார்.அப்படி ஒருவர் கொடுத்த பணத்தை, அவர் இறந்துவிட்டார் என்பதற்காக ஏப்பம் போட நினைப்பது மிக பெரிய அயோக்கியத்தனம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?