11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் … விஷால் குறித்த திடுக்கிடும் பின்னணி.. எதற்கு திருமணம் செய்து வைத்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஷால், சுமார் 5 வருடங்களுக்கு மேலாக நடிகை வரலட்சுமியை காதலித்து வந்தார். இவர்களுக்கு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதன்பின்பு ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனுஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த திருமணம் பாதியில் நின்றது.

45 வயதாகும் விஷால் தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகர் விஷால். சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு சென்னையில் அவருடைய ஏற்பாட்டில் திருமணம் செய்து வைத்தார். விஷால் கைகளால் மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து புரோகிதர்கள் மந்திரங்கள் சொல்ல விஷால் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்பு திருமண பெண்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் சீர்வரிசை பொருட்களும் வழங்கினார்.

விஷால் ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக தன்னுடைய செலவில் திருமணம் செய்து வைத்தது பிண்ணனி குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பல கோடீஸ்வரர்களுக்கு பணம் அதிகமாக இருந்தாலும் கூட அவர்களுடைய திருமண பாக்கியம் என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும், மேலும் அவர்கள் செய்த பாவ கணக்குகளை கழிக்கவும், அவர்கள் முன்னோர்கள் செய்த பாவ கணக்குகளை பிரயாச்சத்தை தேடுவதற்கும் சாஸ்திர ரீதியாக பரிகார தானங்கள் உண்டு.

அந்த தானத்தை செய்தால் அத்தனை பிரச்சினைகளுக்கும் விடிவு காலம் பிறந்துவிடும் என்கின்ற நம்பிக்கை உண்டு. பொதுவாகவே பிறந்த நட்சத்திரத்தன்று செய்யக்கூடிய தானம் நமக்கு பல பலன்களை கொடுக்கும். அந்த வரிசையில் பிறந்த நட்சத்திரத்தன்று தங்கத்தை தானமாக கொடுக்க வேண்டும்.செய்த பாவ புண்ணிய கணக்குகளை சரி செய்து, கர்ம வினைகள் குறைய வேண்டும் என்றால், ஏழை பெண்ணுக்கு தாலி தானமாக கொடுக்க வேண்டும்.

தங்கத்தில் தாலி குண்டினை தானமாக கொடுக்கும் பட்சத்தில், அது அவர்களின் பரம்பரைக்கே பல நன்மைகளை தேடித் தரும். அந்த வகையில் விஷாலின் திருமணமும் மற்றும் சமீபகாலமாக சினிமாவில் அவர் பிரச்சனை மேல் பிரச்சனை சந்தித்து வரும் இந்த நிலையில், ஜோசியர் ஒருவர் ஆலோசனையை ஏற்று ஏழை பெண்ணுக்கு தாலியை தானம் கொடுப்பதன் மூலம். விஷாலின் கருமை வினைகள் அனைத்தும் கழிப்பட்டு நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும் என்ற ஜோசியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜோசியர் ஒருவரின் ஆலோசனையை ஏற்று மாங்கல்ய தானம் செய்ய 11 ஏழை ஜோடிகளுக்கு தன்னுடைய செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார் விஷால் என்கின்றும் கூறப்படுகிறது. மாங்கல்ய தானம் செய்து தனக்கான பரிகாரத்தை செய்துள்ள விஷால். அதையும் தனக்கு சாதகமாக பப்ளிசிட்டி செய்யும் விதத்தில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் என்று விளம்பரம் செய்து கொண்டுள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் மாங்கல்ய தானம் 11 ஏழை ஜோடிகளுக்கு மாங்கல்ய தானம் செய்துள்ள விஷால் தற்பொழுது தன்னுடைய திருமண அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எனக்கு காதலி இருக்கிறார் அவரை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய விரைவில் எனது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் விஷால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.