கடும் கோபத்தில் விக்ரம்… கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… பொன்னியின் செல்வனின் பரிதாப நிலை பற்றி தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். சோழ மன்னர்களின் வரலாற்றுக் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தை மிஞ்சும் அளவுக்கு பொன்னியின் செல்வன் எடுக்கப்பட்டுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

மேலும் இது ஒரு பேன் இந்தியா படம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது, இருந்தும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. கடந்த மாதம் வெளியான பொன்னியின் பட டீசர் வெளியீட்டு விழாவின் போது, அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா போன்றோர் கலந்து கொண்ட நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை.

டீசர் வெளியீட்டு விழா அன்று திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் விக்ரம். இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றும், அந்த அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை புறக்கணிக்கும் நோக்கில் நடிகர் விக்ரம் அன்று மருத்துவமனையில் தன்னை அட்மிட் செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்து படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில், தனக்கு முக்கியத்துவம் இல்லாத பொன்னியின் செல்வன் படம் எப்படி போனால் என்ன என்கிற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மிக பெரிய பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது ஓட வைத்துவிட வேண்டும் என்கின்ற முனைப்பில் இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு பொன்னியின் செல்வன் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளார் மணிரத்தினம். அதற்காக அந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரிடமும் ஒரு மாதத்திற்கு உங்களுக்கு வேறு எந்த ஒரு கமிட் இருக்கக் கூடாது. பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்காக ஒருமாதம் நீங்கள் ஒதுக்க வேண்டும் என மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், நடிகர் விக்ரம் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மணிரத்தினம் தரப்பிலிருந்து தொடர்ந்து விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், தான் நடிக்கும் அடுத்தடுத்த படத்தின் வேலைகளில் கவனம் செலுத்த இருப்பதால் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை விக்ரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர்களே பொன்னியின் செல்வன் படத்தை புறக்கணிக்கும் விதமாக ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் மக்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பு இருக்காது என்பதால், நடிகர் விக்ரம் எப்படியாவது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க மணிரத்தினம் செஞ்சி கூத்தாடி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?