விக்ரம் – பிரசாந்த் இருவரும் நெருங்கிய உறவினர்… இரண்டு குடும்பத்துக்கு என்ன பிரட்சனை தெரியுமா.?

0
Follow on Google News

இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சீயான் விக்ரம் பிரசாந்தின் உறவுக்காரர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இருவரும் சொந்தக்காரர்கள் என்றாலும் பல வருடங்களாக இவர்களிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிதுண்டு. 1990 இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த்.

முதல் படமே பிரசாந்துக்கு எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்தது.முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் பிரசாந்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.. பிரபல இயக்குனரும் திரைப்பட நடிகருமான தியாகராஜனின் மகன் என்பதால் பிரசாந்துக்கு மிகப்பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரசாந்த், நிறைய ஹிட் படங்களை கொடுத்தார்.இதனால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ரசிகர்கள் மன்றம் முளைத்தது. அன்றைய காலகட்டத்தில் அழகும் திறமையும் ஒரு சேர இருந்த பிரசாந்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.அதிலும் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். இப்படி தமிழ் சினிமாவில் ஒய்யாரத்தில் இருந்த பிரசாந்த், இடையில் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

சமீபத்தில் சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த பிரசாந்த், தற்போது மீண்டும் அந்தகன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். நான்கு வருட இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இனி சினிமாவில் பிரசாந்த் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்களான் படமும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.பல வருடங்களாக விக்ரமுக்கும் பிரசாந்துக்கும் இடையில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் அவர்களிடையே என்ன பிரச்சனை என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவந்தது இல்லை. இப்படியான நிலையில், பிரபலத்தை விமர்சகர் சிவபாலன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் சிவபாலன் பேசுகையில், “சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது போல விக்ரமுக்கும் பிரசாந்துக்கும் நேரடியாக எந்த பிரச்சனையும் கிடையாது.உண்மையில் விக்ரமின் தந்தைக்கும் பிரசாந்தின் தந்தைக்கும் இடையே தான் பிரச்சனை. விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் திரிஷாவுக்கு அப்பாவாக நடித்தவர் தான் விக்ரமின் தந்தை. விக்ரமின் தந்தைக்கு பரமக்குடி தான் பூர்வீகம்.சினிமா மீது இருந்த ஆசையால் பரமக்குடியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்த விக்ரமின் தந்தை, பட வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.

அந்த சமயத்தில், பிரசாந்தின் தந்தை தியாகராஜனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இருவரும் நன்கு பழகி நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.அதன் பிறகு விக்ரமின் தந்தை தியாகராஜனின் அக்காவை காதலி திருமணம் செய்து கொண்டார். இது தியாகராஜனுக்கு பிடிக்கவில்லை. நெருங்கி பழகிய நண்பனே இப்படி துரோகம் செய்து விட்டானே என்பது போல் மனம் நொந்து போய் இருந்திருக்கிறார். அன்றிலிருந்து இருவர் இடையே பெரிய பேச்சு வார்த்தை கிடையாது. மற்றபடி பிரச்சினை எல்லாம் கிடையாது.”என்றார்.