விஜய்க்கு குட் பை சொன்ன மனைவி சங்கீதா… கீர்த்தி சுரேஷ் விவகாரத்தில் சங்கீதா எடுத்த முடிவு என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இலங்கையைச் சார்ந்த லண்டன் வாழ் தொழிலதிபரின் மகள் தான் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா. இவர்கள் குடும்பம் இரண்டு தலைமுறையாக லண்டனில் செட்டிலாகி விட்டது, சங்கீதா வளர்ந்தது படித்தது எல்லாமே லண்டனில் தான். பூவே உனக்காக படத்தை பார்த்த பின்பு நடிகர் விஜய்யின் ரசிகையாக இருந்த சங்கீதா. நேரில் விஜயை சந்தித்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு லண்டனில் இருந்து சென்னை வந்த சங்கீதா.

விஜய் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்திக்கும் வாய்ப்பே பெற்றார். முதல் சந்திப்பிலேயே சங்கீதா மீது விஜய்க்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது, அது அடுத்தடுத்த சந்திப்பில் காதலாக வளர்ந்து இருவரும் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், சுமார் 20 வருட விஜய் – சங்கீதா இல்லற வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிறந்த தம்பதியராக வலம் வந்தார்கள் விஜய் – சங்கீதா தம்பதியினர்.

அவ்வப்போது பல கிசுகிசுகள் விஜய் குறித்து வந்தாலும் கூட சினிமாவில் இது சகஜம் தான் என, கணவன் – மனைவி இருவருக்குள் பேசி அதை சரி செய்து சமாதானம் ஆகி கொள்வார்கள். அந்த வகையில், ஏற்கனவே சுமார் 14 வருடங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுடன் விஜய் கிசுகிசுக்கப்பட்ட போது, விஜய் – சங்கீதா இடையில், அது பிரச்சினையாக உருவெடுத்தது அதன் பின்பு திரிஷாவுடன் நடிப்பதில்லை என மனைவியின் கண்டிஷனை விஜய் ஏற்று கொண்ட பின்பு இவர்களுக்குள் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு பின்பு இவர்கள் குடும்பத்தில் பெரிதாக எதுவும் சண்டை சச்சரவு இல்லாமல் சமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவருக்குமான கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் பட்டையை கிளப்பி வருகிறது, நடிகை கீர்த்தி சுரேஷ் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஜய், அவருடைய மேனேஜர் ஜெகதீஷ் மூலம் கீர்த்தி சுரேஷ்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றவர்.

கீர்த்தி சுரேஷ்க்கு கார்டியன் போன்று விஜய் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என விரும்பிய நடிகர் விஜய், அவர் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், விஜய் நண்பர் சஞ்சய் குடியிருக்கும் வீட்டின் மாடியில் கீர்த்தி சுரேஷை குடி வைத்துள்ளது தகவல் வெளியாகி, ஏற்கனவே விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையிலான கிசுகிசுக்களை மேலும் உறுதிப்படுத்து வகையில் அமைந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜயின் மனைவி சங்கீதா லண்டனில் வசித்து வருகிறார். அவர் சென்னைக்கு வருவதை முற்றிலும் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் அனைத்து ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு வந்த மனைவி சங்கீதா சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதன் பின்பே, நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்கின்ற ஒரு செய்தி காற்று தீயாக பரவியது. இது குறித்து விசாரித்ததில் கீர்த்தி சுரேஷ் – விஜய் குறித்த கிசுகிசு சர்ச்சையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே சங்கீதா மற்றும் விஜய் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், அந்தப் பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்ததும் சங்கீதா ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

அதில், கணவர் விஜயின் சுதந்திரத்தில் இனிமேல் தலையிட மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்த சங்கீதா. தானாகவே முன்வந்து உங்கள் இஷ்டம் போல் வாழ்ந்து கொள்ளுங்கள், என்னால் உங்களுடைய இமேஜுக்கு எந்த வித ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. ஆகையால் நாகரீகமாக நான் தற்காலிகமாக உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன். நமக்குள் இருக்கும் பிரச்சனை தீரும் வரை நான் லண்டனில் உங்களை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன் என சங்கீதா எடுத்துள்ள முடிவு தான் அவர் தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.