விஜய் எடுத்த தீடீர் முடிவு … முடிவுக்கு வருகிறது அட்லீயின் சினிமா வாழ்க்கை..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. இவர் நடிகர் ஆர்யா-நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் முலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார் அட்லீ.

முதல் படம் ஹிட் அடித்ததும் சற்று அடக்கி வாசித்து ஒவ்வொரு பேட்டிகளிலும் பேசிய அட்லி. அடுத்து விஜய் நடிப்பில் தெறி படம் இயக்கிய பின்பு தன்னை மிஞ்சிய ஒரு இயக்குனர் இல்லை என்கின்ற தோரணையில் அவருடைய பேச்சும் தலைக்கனமும் அதிகரித்தது. தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இயக்கிய அட்லி அதில் தெறி படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தினார்.

கடந்த பத்து வருடத்தில் நன்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ள அட்லீ. முதல் இரண்டு படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது. விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் இதன் பின்பு பெரிய பட்ஜெட் படம் எடுப்பதையே கைவிட்டு விட்டனர்.

அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் வகையில், மெர்சல், பிகில் போன்ற படங்களில் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை மீறி, பணத்தை வீண் விரையம் செய்தது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் அட்லீ. தற்பொழுது சாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார் ஷாருக்கான், படப்பிடிப்பில் பணத்தை வீண் விரயம் செய்கிறார் அட்லீ என்கிற தகவல் ஷாருக்கான் கவனத்துக்கு சென்றுள்ளது.

இதனால் அட்லியை நேரில் அழைத்து பலமுறை ஷாருக்கான் கண்டித்துள்ளார். இருந்தும் அட்லி தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகம் செலவை செய்து வந்துள்ளார். மேலும் ஜவான் படம் தொடங்கி சுமார் 4 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் இந்த படம் முடிவடைந்து திரைக்கு வருவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் இயக்குனர் அட்லீயின் தவறான திட்டமிடல் தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல இயக்குனர்களிடம் பணியாற்றிய ஷாருக்கான், அட்லீயிடம் சிக்கிக்கொண்டு இந்த படத்தை எப்ப ரிலீஸ் செய்து போட்ட பணத்தை எடுப்பது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் சாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தை முடித்துவிட்டு அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார் இயக்குனர் அட்லி. அதற்காக கதை மற்றும் சம்பளம் என அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

ஆனால் திடீரென்று அட்லியை தன்னுடைய ப்ராஜெக்ட் இருந்து கழட்டி விட்டுள்ளார் விஜய். இதற்கு முக்கிய காரணம் அட்லி மீது தயாரிப்பாளர்கள் கூறும் புகார்கள் தான். அட்லி இயக்கத்தில் நடிக்க விஜய் முன்வந்தாலும் கூட பல தயாரிப்பு நிறுவனம் யாரும் அட்லீ இயக்கும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இதனால் தன்னால் தயாரிப்பாளருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அட்லியை கழட்டி விட்டுள்ளார் விஜய்.

இந்த நிலையில் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் போன்ற பல முன்னணி இயக்குனர்கள் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அட்லி தற்போது ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது அடுத்து விஜய் படத்தில் கமிட்டாகி பின்பு அந்த ப்ராஜெக்ட் அவருக்கு கைநழுவி போய்விட்டது.

இந்த நிலையில் அடுத்த அட்லி இயக்கத்தில் எந்த ஒரு முன்னணி நடிகரும் நடிக்க முன்வராத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அட்லீக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அட்லீ தற்பொழுது சம்பளம் அதிகம் கேட்பதால் அவர் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தை இயக்கினால் தான் அந்த சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க முடியும்.

இந்த நிலையில் அடுத்தடுத்து இனி அட்லிக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் அட்ரஸ் இல்லாம போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் இதுவரை அட்லீக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்பு அளித்த வந்த விஜய்யும் அட்லீயை கழட்டி விட்டது தான் என கூறப்படுகிறது