பரிதவிக்கும் விஜய் மகன்… சூரியிடம் உதவி கேட்டு நிற்கும் விஜய் மகன் சஞ்சய்… கண்டுகொள்ளாத விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில், இப்படத்தின் ஹீரோவாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. ஆரம்பத்தில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின் தான் ஹீரோ என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அதை அடுத்து விஜய் சேதுபதி தான் ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தின் ஹீரோ என்று தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இப்போது இவர்கள் இரண்டு பேரும் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. அதாவது விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்க அணைத்து நடிகரும் தயக்கம் காட்டி வருவதால் விஜய் மகன் சஞ்சய் தற்பொழுது நடிகர் சூரியிடம் தஞ்சம் அடைந்துள்ளார். சூரி காமெடிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இருப்பிடம் சூரியின் காமெடி கவுண்டர்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். சூரி காமெடி எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்று இணையத்தில் ரோஸ்ட் செய்து வந்தனர்.

இப்படியான நிலையில் தான் சூரி ஹீரோவாக அவதரிக்கும் நேரம் வந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சூரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூரியை காமெடியனாக ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் பலரும் ஹீரோவாக தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தனர். விடுதலை படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவைத் தொடர்ந்து, கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து விடுதலை பார்ட் 2 படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவில் ஒரு சின்ன புள்ளியில் இருந்து ஆரம்பித்த நடிகர் சூரி, இன்று ஒரு படத்திற்கு எட்டில் இருந்து 10 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இதனால் இயக்குனர்களின் கவனம் சூரியின் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் இப்போது ஜேசன் சஞ்சய் தன்னுடைய படத்தில் சூரியை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சூரியை சந்தித்து கதை சொன்ன சஞ்சய், சூரியின் சம்மந்தத்திற்காக காத்திருக்கிறார். கதை கேட்ட சூரியும் சஞ்சய்க்கு எந்த ஒரு உறுதியான பதிலும் சொல்லாமல், எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்க தம்பி கைவசம் படம் நிறையா இருக்க எப்படினு பார்த்து சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். அதாவது சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக முத்திரை பதித்து விட்டார்.

அடுத்ததாக கருடன் படமும் சூரி மிக பெரிய பெரும் புகழும் வாங்கி கொடுத்துள்ளது, அதாவது சூரிக்கு ஏற்ற கதையாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அமைத்தது அதுவே சூரியின் வெற்றிக்கு காரணமும் கூட, அப்படி இருக்கும் போது நல்ல பீக்கில் சென்று கொண்டிருக்கும் போது, விஜய் மகன் என்கிற அடையாளம் மட்டுமே வைத்து கொண்டு, எந்த ஒரு பெரிய இயக்குனரிடம் துணை இயக்குனராக வேலை செய்யாத சஞ்சய் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க சூரிக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு காமெடியனை வெற்றிமாறன் போன்ற மிக பெரிய இயக்குனர் ஹீரோவாக உருவாகியதை சின்ன பையனை நம்பி பின்னால் சென்று நம்மை காலி செய்து விடுவாரா விஜய் மகன் சஞ்சய் என்கிற குழப்பத்தில் இன்னும் விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்யாமல் இருக்கிறார் சூரி. அந்த விதத்தில் விஜய் மகன் சஞ்சய் இப்படி ஹீரோ கிடைக்காமல் அலைவது விஜய்யும் மகனை கண்டு கொள்ளவில்லை இப்படியான சூழலில் என்னடா இது விஜய் மகனுக்கு வந்த சோதனை என சினிமா துறையினர் பரிதாப படுகிறார்கள்.