அஜித்துடன் கைகோர்க்கும் விஜய் மகன்.. தந்தை மீது இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு தான் காரணமா.?

0
Follow on Google News

நடிகர் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோசன் சஞ்சய் அவருடைய தந்தை விஜய்க்கும் இடையில் நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இது குறித்து சினிமா வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சஞ்சய் லைக்கா நிறுவனத்தில் புதிய படத்தில் இயக்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது கூட முன்கூட்டியே நடிகர் விஜய்க்கு எந்த ஒரு தகவலும் செல்லவில்லை என்றும், மிக ரகசியமாக லைக்கா நிறுவனமும் விஜய் மகன் சஞ்சையும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான பின்பு சினிமா ரசிகர்கள் எப்படி ஷாக்காக பார்த்தார்களோ அதே ஷாக் தான் நடிகர் விஜய்க்கு இருந்திருக்கும் என்றும்,

ஏனென்றால் நீண்ட நாட்களாகவே விஜய்க்கும் அவருடைய மகனுக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு இன்று சினிமாவில் சக போட்டியாளராக இருக்கும் நடிகர் அஜித்தின் கூடாரத்தின் உள்ளே சஞ்சய் சென்று விட்டார் என்கின்ற தகவலும் வெளியாகிறது. லைக்கா நிறுவனத்திடம் ஜோசப் சஞ்சய் 3 கதைகளை சொல்லியுள்ளார். ஆனால் மூன்று கதைகளும் முழு கதையையும் முழுசாக சொல்லாமல் ஒன் லைன் ஸ்டோரியை தெரிவித்து இருக்கிறார்.

அதில் நடிகர் அஜித்காக ஒன்று விஜய் சேதுபதிக்காக ஒன்று மற்றும் அனிருத் ஹீரோவாக நடிக்க ஒரு படத்தின் ஒன் லைன் ஸ்டோரியையும் தெரிவித்து இருந்திருக்கிறார் சஞ்சய். இதனைத் தொடர்ந்து இந்த ஒன் லைன் கதையை முழு ஸ்கிரிப்டாக உங்களால் கொண்டு வர முடியுமா என தயாரிப்பு நிறுவனம் ஜோசன் சஞ்சயிடம் கேட்க, அதற்கு நிச்சயமாக முடியும் என்று தெரிவித்துள்ளார். உடனே அனுபவம் வாய்ந்த இயக்குனர்களிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் தற்பொழுது ஜோசப் சஞ்சய்க்கு உதவியாக பணியாற்ற தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

மேலும் ஜோசப் சஞ்சய்க்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் தமிழில் நன்கு கற்றுத் தெரிந்த ஒரு உதவி இயக்குனரும் ஜோசப் சஞ்சய்க்கு உதவி இயக்குனராக தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது, அந்த வகையில் தற்போது ஜோசன் சஞ்சய் தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்ன 19 ஸ்டோரியை முழு கதையும் வடிவமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எப்படி சஞ்சைக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையில் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் என்கின்ற ஒரு அறிவிப்பு வந்ததோ, அதேபோன்று நடிகர் அஜித்தை சஞ்சய் இயக்க இருக்கிறார் என்கின்ற ஒரு அறிவிப்பு வெளியாகி எல்லோருக்கும் மிகப்பெரிய ஷாக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் சினிமா துறையினர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம் தெரிவித்த போது அவருடைய சொந்த இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கின்ற படத்தின் மூலம் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து பல்வேறு படங்கள் மகன் விஜயை வைத்து இயக்கி அவருடைய சினிமா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்ஏ சந்திரசேகர்.

அந்த வகையில் தன்னுடைய மகன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கின்ற விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விஜய் அவருடைய மகனுக்கு கால் சீட் கொடுத்து மகன் இயக்கும் முதல் படத்திலேயே இவர் ஹீரோவாக நடித்து மகனுக்கான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்க வேண்டும். ஆனால் விஜய் செய்யாததால் தற்போது சஞ்சயின் சினிமா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது போல் அஜித் கை கொடுப்பார் என்கிறது சினிமா வட்டாரங்கள்