பாவம் விஜய்யின் தாய், தந்தை… இரக்கமில்லையா விஜய் உங்களுக்கு.. எந்த தாய், தந்தைக்கு இந்த நிலை வரக்கூடாது.!

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகர் விஜய். சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் விஜயின் ஆரம்ப கட்டத்தில், அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வந்தது அவரது தந்தை என்பதை மறுக்க முடியாது. 80களில் SA சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலன படங்களில் தன்னுடைய மகன் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வந்தார். 1992ல் தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்.

விஜய்க்கு ஆரம்ப கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தன்னுடைய சொந்த இயக்கத்தில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து தன்னுடைய மகனை எப்படியாவது ஒரு நட்சத்திர நடிகனாக வருவதற்கு SA சந்திரசேகர் எடுத்த முயற்சிகள் தான் இன்று விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். அதே போன்று டாப் நடிகராக விஜய் உயர்ந்தாலும் அடுத்தடுத்து அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை.

இந்நிலையில் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக அவருடைய தந்தையுடன் பேசுவது கிடையாது என கூறப்படுகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தில் தந்தை SA சந்திரசேகர் தலையிட முடியாதவாறு பல்வேறு மாற்றங்களை விஜய் மக்கள் இயக்கத்தில் செய்துள்ளார் விஜய். மேலும் விஜய் மக்கள் இயக்கதின் தந்தை-மகன் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடதக்கது.

இதில் மிக பெரிய சோகம் என்னவென்றால் தந்தையுடன் சேர்ந்து தாய் சோபாவையும் தள்ளிவைத்துள்ளார் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் SA சந்திரசேகர் அவர்களின் 80வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் யாருமே கலந்து கொள்ளவில்லை, அதே போன்று விஜய் பிறந்தநாள் அன்று அவருடைய தந்தை, தாய் யாரையும் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கவில்லை.

தாய், தந்தையை தள்ளி வைக்கும் அளவுக்கு அவர்கள் மீது விஜய்க்கு அப்படி என்ன கோபம் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மற்றொரு சம்பவமாக, சமீபத்தில் SA சந்திரசேகர் – ஷோபா இருவருடைய திருமணம் நாள், திருக்கடையூரில் நடைபெற்றது, அப்போது கூட விஜய் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை, இதில் விஜயின் தந்தையும், தாயும் தனியாக மாலையும் கழுத்துமாக ஆதரவற்றவர்கள் போல் நின்ற புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் ஆயிரம் தான் இருந்தாலும் வயதான தாய், தந்தை வயதான காலத்தில் கூடவே இருந்து பார்க்க வேண்டிய விஜய், இப்படி தனியாக தவிக்க விடும் அளவுக்கு இரக்கமற்றவராக இருப்பது கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், விஜய் திருந்தி அவருடைய தாய் தந்தையை ஏற்று கொள்ள வேண்டும் என பலர் விஜய்க்கு அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?