வாயை பிளக்க வைக்கும் பிரமாண்டமான விஜய் புதிய அலுவலகம்… எத்தனை கோடி தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றனர் நடிகர் விஜய். நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு சுமார் 130 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவருக்கு சொந்தமான இரண்டு திருமண மண்டபங்களை பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு லீசுக்கு விட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அலுவலகம் இதுவரை பெசன்ட் நகரில் செயல்பட்டு வந்தது, ஆனால் தற்பொழுது பட்டினப்பாக்கத்தில் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒசாலி ஓட்டல் இருந்த இடத்தில் அப்பாசாமி பில்டர்ஸ் என மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் 15வது தல முழுவதையும் விஜய் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த தளம் முழுவதும் நடிகர் விஜயின் அலுவலகமாக செயல்பட இருக்கிறது, தற்பொழுது புதிய அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கையில், இதுவரை ஒருநாள் கூட அந்த அலுவலகத்திற்கு விஜய் வரவில்லை என்றும், அந்த அளவுக்கு சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் புதிய அலுவலகத்திற்கு சென்ற பின்பு தனக்கு பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாகவும். அதனால் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளார் விஜய்.

வாரிசு படப்பிடிப்பு முடித்து குடும்பத்துடன் துபாய் சென்றுள்ள விஜய், துபாயிலிருந்து திரும்ப வந்த பின்பு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரம்மாண்ட புது அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார் என்றும், கதை சொல்ல வரும் இயக்குனர்கள், புதிய பட ஒப்பந்தத்திற்காக கால் சீட் வாங்க தயாரிப்பாளர்கள் இனி சந்திக்க வேண்டும் என்றால் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தான் இனி சந்திக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.