கஷ்டத்தில் உதவி செய்த விஜயகாந்த்… நடிகை கௌசல்யா வாழ்க்கையில் நடந்த கண்கலங்க வைத்த சம்பவம்…

0
Follow on Google News

எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் நடிகை கௌசல்யா வெள்ளி திரையில் கதாநாயகியாக இருக்கும்போது இருந்த அதே அழகு அப்படியே மெயின்டனன்ஸ் பண்ணி கொண்டு இருக்கிறார். இவருக்கு மட்டும் வயது ஆகவில்லையா? என்று பார்ப்பவர்கள் கேட்கும் வகையில் தான் இவருடைய அழகு இப்பவும் குறையாமல் இருந்து வருகிறது. கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தானாம்.

அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் முதல் திரைப்படத்தில் இவர் நந்தினி என்று கேரக்டரில் நடித்ததால் இவரை நந்தினி என்றுதான் அழைத்து வருகிறார்களாம்.அதே நேரத்தில் தமிழில் இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள்.

முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் கூட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நிலையில் ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அது மட்டும் இல்லாமல் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் திடீரென சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்திருக்கிறார். சமீப காலமாக மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இவருக்கு தற்போது 41 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக தான் இருந்து வருகிறார்.

ஆனால், இவருக்கு திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் எல்லாம் வந்தது. மேலும், இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கௌசல்யா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து சொன்னது, நான் திருமணம் செய்து என்னுடைய வாழ்க்கையை தொடங்கும் அளவிற்கு ஒரு சரியான நபரை பார்க்க வில்லை. பின்பு எப்படி நான் திருமணம் செய்ய முடியும்.

ஒரு வேலை நான் எதிர்பார்க்கும் ஒரு நபரை சந்தித்து இருந்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசித்து இருப்பேன். சினிமாவில் இருந்து விலகி இருந்தபோது நான் கிரிக்கெட் வீரரை காதலித்தேன். பின் பிரேக் அப் செய்ததாக செய்திகள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளிவந்திருந்தது. ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை. நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அதிகம் காரணம் என் பெற்றோர்கள் தான். நான் பெற்றோருடன் இருந்து வளர்ந்து விட்டேன். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது.

அதுபோல அவர்களைப் பிரிந்து என்னாலும் இருக்க முடியாது. இந்த காரணத்தினால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் தான் நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட இக்கட்டான பிரச்சனையில் விஜயகாந்த் தனக்கு எவ்வாறு உதவி செய்தார் என்பது பற்றி கௌசல்யா பேசியிருக்கிறார்.

கௌசல்யா பேசியதாவது “விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தில் நான் அவருடன் இணைந்து நடிக்கும் போது எங்களை எல்லாம் அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். ஒருமுறை நான் இரவு காரில் வந்து கொண்டிருக்கும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ரோட்டில் என்னுடைய கார் பஞ்சராகி நின்று விட்டது. டிரைவர் கூட டயர் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார்.

அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த விஜயகாந்த் உடனே என்ன நடந்தது? என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னதும் அவரே காரில் இருந்த ஸ்டெப்னி டயரை எடுத்து பஞ்சரான டயரை மாற்றி என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இந்த மாதிரி குணம் யாருக்கும் வராது.அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போதும், அவர் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. விஜயகாந்த் எப்போதுமே யாராலும் குறை சொல்ல முடியாத நபர்’ என்று நடிகை கௌசல்யா பேசியுள்ளார்.