அதுக்கெல்லாம் நீ ஒர்த் இல்லை.. விஜயின் பேராசையை நிராகரித்த வாரிசு தயாரிப்பாளர்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் வசூல் என்கின்ற ஒருதகவல் பரவலாக செய்திகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. மேலும் விஜய்க்கு ஆதரவான சில சினிமா துறையைச் சார்ந்தவர்கள் விஜய் தான் டாப் ஒன். அவர்தான் சூப்பர் ஸ்டார் என்றும் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக பில்டப் கொடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் விஜய்க்கு ஆதரவான சேனல்களும் கூட விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என்கின்ற ஒரு பிம்பத்தையும் உருவாக்கி வந்தனர். இந்த நிலையில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என முடிவு செய்த பின்பு, இம்முறை உண்மையிலேயே யார் நம்பர் ஒன் என்பதை பார்த்து விட வேண்டும் என்கின்ற ஒரு நேரடி போட்டியில் களம் காண தயாரான நடிகர் அஜித்.

விஜய் படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய துணிவு படத்தை மோதவிட்டு, யார் நம்பர் ஒன் என்பதை பார்த்து விடுவோம் என்று மோத விடுவதற்கு முடிவு செய்தார். இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான துணிவு ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வாரிசு படத்தை முந்தி சென்றுள்ளது துணிவு.

மேலும் சிங்கப்பூர் போன்ற இன்னும் சில நாடுகளில் வாரிசு ஓப்பனிங் ஆளில்லாமல் காற்று வாங்கும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையில் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படத்திற்கும் நடந்த நேரடி மோதலில் துணிவு தான் வெற்றி அடைந்துள்ளது என்கின்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் இதுவரை நான் தான் நம்பர் ஒன், நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கின்ற மிதப்பிலிருந்த விஜய்க்கு இது மிகப்பெரிய அடியாக விழுந்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஒரு ஆசை இருந்துள்ளது, அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு சினிமா முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய படங்கள் வெளியாகும் அதே தேதியில் தான் நடித்த வாரிசு படத்தை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று தெலுகு சினிமாவில் நம்பர் ஒன் என்று ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தயாரிப்பாளரிடம் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய வாரிசு படத்தையும் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் விஜய் சொல்வது போன்று நேரடியாக சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் படங்களுடன் வாரிசு மோதவிட்டால் நிச்சயம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என உணர்ந்த தில்ராஜ்.

மேலும் ஒற்றுமையாக இருக்கும் தெலுங்கு சினிமாவில் தனக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதால், தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் நேரடியாக மோதும் அளவுக்கு விஜய் ஒன்றும் ஒர்த் இல்லை என்பதை மனதில் வைத்து, விஜயின் இந்த பேராசையை நிராகரித்து விட்டு வழக்கம் போல் 11 தேதி தமிழில் விஜய் நடித்த வாரிசு படம் வெளி இருந்தாலும் , அடுத்த நான்கு நாள் கழித்து தான் தெலுங்கில் வாரிசு படத்தை தில்ராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழில் ஏற்கனவே வெளியாகி இந்த வாரிசு படத்தின் விமர்சனங்கள் எதிர்மறையாக அமைந்துள்ளதால் தெலுங்கில் தற்பொழுது வாரிசு படத்திற்கு வரவேற்பு இல்லை என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.