தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட விஜய்… வாரிசு படம் மண்ணை கவ்வ அவரே தான் காரணமாம் ..

0
Follow on Google News

சமீப காலமாக நடிகர் நடிப்பில் வெளியான படங்களின் தோல்விக்கு காரணம் சரியான கதை தேர்வு மற்றும் இயக்குனர்கள் திரைக்கதையில் கோட்டை விடுவது தான் என்பது முக்கிய காரணமாக இருந்தாலும். விஜய் படங்கள் தொடர் தோல்விக்கு தனக்குத்தானே அவர் வைத்துக் கொண்ட ஆப்பு தான் என்கின்ற ஒரு தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

விஜய் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய ஹீரோயிசத்தை காண்பிக்க, ஒவ்வொரு தரப்பினரை வம்பு இழுத்து பகைமையை ஏற்படுத்திக் கொண்டவர். அந்த வகையில் சர்க்கார் படம் வெளியான போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சை கூறிய காட்சிகளை இடம்பெற வைத்து, மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய விலையில்லா பொருட்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்து. அதிமுக தொண்டர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்திக் கொண்டார் விஜய்.

இதேபோன்று விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசை சீண்டும் வகையில் வசனம் அமைத்து, தமிழகத்தில் உள்ள பாஜகவினரிடம் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் பேசி இந்து உணர்வாளர்களின் பகைமையை சம்பாதித்துக் கொண்டார். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜய், ஏதாவது ஒரு தரப்பினரிடம் பகைமையை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

இதனால் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தின் போது, அந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பை விட எதிர்ப்பு என்பது, ஒவ்வொரு படத்தின் போது அதிகரித்து செல்கிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந், மற்றும் அவரது ரசிகர்களை சீண்டும் வகையில், ஒரே சூப்பர் ஸ்டார் அது விஜய் தான் என்கின்ற ஒரு பிம்பம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் கட்டி அமைக்கப்பட்டு வந்தது.

இதன் பின்னனியில் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்பட்டது. இது ரஜினி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபமடையச் செய்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார் விஜய். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகி நேரடியாக மோதியது.

விஜய் படம் திரையரங்குக்கு வரட்டும் வெச்சு செய்கிறோம் என காத்திருந்த அஜித் ரசிகர்களிடம் கை கோர்த்தனர், இதற்கு முன்பு விஜய் பகைமையை ஏற்படுத்தி கொண்ட ஒவ்வொரு தரப்பினரும். அந்த வகையில் வாரிசு படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் கூட, விஜய்க்கு எதிரான எதிர்ப்பு என்பது பல மடங்கு அதிகரித்துள்ளதால், எதிப்புகளை சமாளிக்க முடியமால் தத்தளித்து வருகிறார்கள் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள்.

இந்த அளவுக்கு விஜய்க்கு எதிராக எதிப்புகள் அதிகரிக்க காரணம் விஜய் தேவையின்றி பல தரப்பினரிடம் வம்பு இழுத்து சண்டை ஏற்படுத்தியது தான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வாரிசு படம் தோல்வியை தழுவியிருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உடன் இணைந்து, விஜய் இதற்கு முன்பு எந்தெந்த தரப்பினரிடம் பகைமையை ஏற்படுத்தினாரோ, அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டுவதற்காக ஒவ்வொரு தரப்பினரையும் சீண்டி அவர்களிடம் பகைமையை ஏற்படுத்தி வந்த விஜய்க்கு இன்றைய நிலவரப்படி அவருக்கு இருக்கும் ரசிகர்களை விட எதிர்ப்பாளர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் இனி வரும் விஜய் நடிக்கும் படம் நன்றாக இருந்தாலும் கூட அந்த படத்திற்கு எதிப்புகளும் கேலி கிண்டல்களும் இருக்க தான் செய்யும் என கூறப்படுகிறது.