வாரிசு தயாரிப்பாளர் பார்த்த சில்ரதனமான வேலை.. இந்த பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பு பேசுகையில், விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார்.அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப்போகிறேன் என தில்ராஜ் தெரிவித்தார். இந்நிலையில் விஜய் நம்பர் 1 என்று தில் ராஜ் பேசியதால், தமிழக சினிமா ரசிகர்கள் இடையே கடும் மோதல் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வந்தது.

யாருய்யா இவர், தெலுங்கு சினிமாவில் இருந்து வந்த தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு சண்டை இழுத்து விடுகிறார் என்கிற விமர்சனமும் தில் ராஜுக்கு எதிராக எழுந்தது. இந்த நிலையில் வாரிசு படம் வெளியாகி ஏழு நாட்களில் 200 கோடி வசூல், 300 கோடி வசூல் என பலர் வடை சுட்டு வந்தாலும், பல இடங்களில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும், குறிப்பாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் மிக மோசமான வசூலை அடைந்துள்ளது வாரிசு படம் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் வாரசூடு என பெயரிட்டு வெளியிடப்பட்ட வாரிசு படம் மூன்று நாட்களில் சுமார் 50 கோடி வரை வசூல் அடையும் என்று எதிர்பார்த்த நிலையில். சுமார் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோர் நடிக்கும் படங்களை தயாரிக்க இருக்கும் தில்ராஜ் தன்னுடைய கவனத்தை முழுவதும் தமிழ் சினிமா பக்கம் திருப்பியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் புதிய படங்கள் தயாரிப்பதை கைவிட்டுவிட்டு தமிழ் சினிமாவில் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கான என்ட்ரி தான் வாரிசு படம் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இருந்து தில்ராஜ் வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்பொழுது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் என தெரிவித்து ரசிகர்கள் மத்தியில் தில்ராஜ் சண்டை இழுத்து விட்டது போன்று,

தெலுங்கு சினிமாவில் பல சில்லரை வேலைகளை செய்து வந்துள்ளார் தில்ராஜ் தமிழ் சினிமா போன்று போட்டி இருக்கும் ஆனால் பொறாமை கொண்டது கிடையாது தெலுங்கு சினிமா. அங்கே நடிகர்கள் மத்தியில் போட்டி இருந்தாலும் பொறாமை இருக்காது. தங்களுடைய போட்டியாளர்கள் படத்தை பிரமோஷன் செய்வதற்கு கூட நடிகர்கள் கலந்து கொள்வதை பார்க்க முடியும்.

அந்த வகையில் ஒற்றுமையாக இருக்கும் தெலுங்கு சினிமாவில் பல சில்லரை வேலையை செய்து அங்கே ரசிகர்கள் மத்தியில் மோதல் போக்கை உருவாக்கும் வேலைகளில் தில்ராஜ் ஈடுபட்டு வந்ததால், தெலுங்கு பட முன்னணி நடிகர்கள பிரபாஸ் மற்றும் மகேஷ்பாபு ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இனி தில்ராஜ் தயாரிக்கும் படங்களில் தாங்கள் நடிக்க மாட்டோம் என்கின்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மேலும் பல முன்னனி நடிகர்கள் தில்ராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டோம் என புறக்கணிக்க தொடங்கியதால் தான் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார் தில்ராஜ், இந்நிலையில் விஜய் தான் நம்பர் 1 என்று தெரிவித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தில்ராஜ் சண்டை இழுத்து விட்டது வெறும் ட்ரைலர் தான், இன்னும் பல சில்லறை வேலைகள் செய்து, சினிமாவுக்குள் கலகம் ஏற்படுத்துவார் என எச்சரிக்கின்றனர் சினிமா துறையை சேர்ந்த சிலர்..