யார் என்ன சொன்னா என்ன.? எனக்கு விஜய்க்கு இடையில் இது தான்… அப்படியே போட்டுடைத்த திரிஷா…

0
Follow on Google News

கடந்த இரண்டு வாரங்களாகவே சோசியல் மீடியாவை திறந்தால் விஜய், திரிஷா சர்ச்சை மட்டும்தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. விஜயும், திரிஷாவும் காதலிக்கிறார்கள், லிவ்விங் டுகெதரில் இருக்கிறார்கள், விஜய்க்கும் அவர் மனைவி சங்கீதாவுக்கும் விவாகரத்து ஆகப் போகிறது என, எண்ணற்ற கருத்துக்கள் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக நடிகை திரிஷாவும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ரீசன்ட் புகைப்படங்களை பகிர்ந்து, இந்த கிசுகிசுப்புகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல், ஒரு ட்வீட் ஒன்றையும் போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் மற்றும் நடிகையாக இருக்கும் விஜய், த்ரிஷா ஆகிய இருவரும், கிசு கிசுப்புகளிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றனர். கில்லி, குருவி ஆகிய படத்தில் இருந்தே பரவிய இந்த கிசுகிசுப்புகள், தற்போது கடைசியில் வெளியாகிய லியோ படம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையே திரிஷாவும் ,நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளுக்கு தாங்கள் இருவரும் லிப்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஒரு காதல் பாட்டையும் இணைத்து வாழ்த்து கூறியிருந்தார். இதனை பார்த்ததும் விஜயின் ரசிகர்கள் ஷாக் ஆனதோடு, அவரின் ஹேட்டர்ஸ்கள் குதூகலமாகி, விஜய்யும் திரிஷாவும் காதலிப்பது உறுதியாகிவிட்டது என கூறி கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அதோடு த்ரிஷாவின் இன்னொரு புகைப்படத்தையும் தோண்டி எடுத்து, இதில் இருக்கும் ஷூ விஜயின் ஷூ என கூறி, பல சர்ச்சைகளையும் கிளப்பி விட்டிருந்தனர். இதன் கூடவே பாடகி சுசித்ராவும், விஜய் த்ரிஷாவிடம் இருந்து விலகி, சங்கீதாவுடன் இணைந்து வாழ வேண்டும், மேலும் அரசியலில் விஜய், எம்ஜிஆர் போல் என்ட்ரி கொடுத்துள்ளதால், திரிஷா, ஜெயலலிதா போல் மாற விரும்புகிறார், இதனால் விஜய் த்ரிஷாவை தன் பக்கத்தில் நெருங்க விடக்கூடாது என பல கருத்துக்களையும் முன் வைத்திருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக பரவும் பல கிசுகிசுப்புகளுக்கு நடிகை திரிஷாவும், விஜய்யும் இன்று வரை முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அதற்கு மாறாக நடிகை திரிஷா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில், யார் பேசுவதையும் நாம் கண்டுகொள்ள கூடாது, மற்றவர்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன என பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா இந்த சர்ச்சைகளுக்கு மறுப்பு தானே தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் யார் பேசுவதையும் நாம் கண்டுகொள்ளக்கூடாது எனக் கூறியிருக்கிறாரே, அப்போது இந்த வதந்திகள் எல்லாம் உண்மைதானா என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே பலரும் திரிஷா வேண்டும் என்றே தான் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார் என்றும், திரிஷா- விஜய்யுடன் சேர்வதற்காக இப்படி அவரே பல சர்ச்சைகளை கிளப்பி விடுகிறார் என்றும் பல தகவல்களை கூறியிருந்தனர்.

ஆனாலும் விஜய் ரசிகர்கள், இதனை விஜய்யின் ஹேட்டர்ஸ்கள் தான் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்றும், நடிகர் விஜய்யும் இதற்கு இன்றுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதற்கு காரணம், வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும், அதனால் அதை புறக்கணித்து விட வேண்டும் என அவர் முன்பே பேசிய பேச்சுக்களை பகிர்ந்தும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்போது த்ரிஷா இந்த கிசுகிசுப்புகளுக்கு யார் என்ன பேசினால் எனக்கு என்ன என்று பதிவிட்டு, இந்த சர்ச்சைக்கு மறுப்பு தெரிவிக்காமல் பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் திரிஷா பற்றிய சில அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் என்று சினிமா வட்டாரங்களால் பேசப்படுவதும் கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here