ஒரே அப்பார்மெண்டில் ஐக்கியமான விஜய் – திரிஷா… இனி மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை…

0
Follow on Google News

நீண்ட இடைவெளிக்கு பின்பு சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த திரிஷா, விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த நிலையில் ஏற்கனவே திரிஷா உடன் கிசு கிசுவில் சிக்கி வீட்டில் பெரும் பிரச்சனையை சந்தித்து, அதன் பின்பு திரிஷா உடன் ஜோடி சேர்வதை தவிர்த்து வந்த விஜய், மீண்டும் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் லியோ படம் தொடங்குவதர்க்கு முன்பே அவருடைய வீட்டில் பிரச்சனை தொடங்கிவிட்டதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் கணவர் விஜய், திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை சங்கீதா விரும்பவில்லை என்றும். ஆனால் திரிஷாவை தன்னுடைய படத்தில் இருந்து நீக்குவதற்கு விஜய் மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் கணவர் விஜய் மீது உள்ள கோபம் காரணமாக லண்டனில் தந்தை வீட்டில் இருந்து வரும் சங்கீதா, விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு வராமல் தவிர்த்ததற்கு காரணம் கூட விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இன்னும் சமரசம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை திரிஷாவால் விஜய் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் இடையில் பிரட்சனை ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று மேலும் ஒரு சம்பவம் வெளியானது. ஏற்கனவே நடிகை திரிஷாவுக்கு வீடு இருக்கும் நிலையில், விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டின் அருகில் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை திரிஷா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் நீலாங்கரை வீட்டின் அருகிலே திரிஷா குடியேறிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் அலுவலகம் பெசன்ட் நகரில் செயல்பட்டு வந்த நிலையில், தற்பொழுது பட்டினப்பாக்கத்தில் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒசாலி ஓட்டல் இருந்த இடத்தில் அப்பாசாமி பில்டர்ஸ் என மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் 15வது தளத்தை விஜய் 25 கோடி கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த தளம் முழுவதும் நடிகர் விஜயின் அலுவலகமாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், அதே அப்பார்ட்மென்டில் 17 கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கி குடியறியுள்ளார் நடிகை திரிஷா, அந்த வகையில் ஒரே அப்பார்மெண்டில் விஜய் அலுவலகமும், திரிஷா குடியிருக்கும் வீடும் இருக்கும் நிலையில், இதெல்லாம் எதார்த்தமாக நடக்க வாய்ப்பே இல்லை என்றும்.

ஏற்கனவே விஜய் நீலாங்கரை வீட்டின் அருகிலே ஒரு வீட்டை வாங்கி குடியேறினார் திரிஷா, தற்பொழுது விஜய் அலுவலகம் இருக்கும் அப்பார்மெண்டில் புதியதாக வீடு வாங்கி குடியேறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும் சமீபத்தில் விஜய் பிறந்தநாளுக்கு விஜய் உடன் திரிஷா லிப்ட்டில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் ஒரே அபார்ட்மெண்டில் இருக்கும் விஜய் – திரிஷா இருவரும் அந்த அப்பார்மெண்டில் ஒரே லிப்ட்டில் செல்லும் போது எடுத்த புகைப்படமா? இது என ஆராய தொடங்கியுள்ளது ஒரு தரப்பு, இந்நிலையில் விஜய் உடன் திரிஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த உலகிற்கு எதோ சொல்ல வருகிறார் என்றும் மட்டும் தெரிகிறது, ஆனால் அது என்னவென்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர் பலரும்.