கீர்த்தி சுரேஷை களத்தில் இறக்கும் நேரம் வந்து விட்டது… சாதுர்யமாக கீர்த்தி சுரேசை பின்னின்று இயக்கும் விஜய்…

0
Follow on Google News

கோலிவுட் சினிமாவின் நம்பர்.1 நடிகராக இருக்கும் விஜய், சர்ச்சைகளில் சிக்குவதிலும் நம்பர்.1 தான். விஜய் என்றாலே எப்படி த்ரிஷா என்று ஒரு பக்கம் சொல்வார்களோ, அதே போல் தான் மறுபக்கம் கீர்த்தி சுரேஷ் என்றும் சொல்வார்கள். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் திகழ்கிறார்.

இவர் தற்போது அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ரகுதாத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ், அரசியல் வருகை குறித்து பேசியது, விஜய்க்கும், கீர்த்திக்கும் இடையே தொடர்பு இருப்பதாய் உறுதி செய்யும் வகையில் அமைத்துள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கினார்.

தற்போது கைவசம் இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், 2026 தேர்தலில் முதல்வராகி, தமிழகத்தில் அடிப்படை அரசியல் மாற்றத்தை கொண்டு வரப் போகிறேன் என அறிவித்திருந்தார். அப்போது அவர் அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே தன்னுடைய படங்களில் அரசியல் பேச ஆரம்பித்தார். குறிப்பாக தலைவா, சர்க்கார் போன்ற படங்கள் எல்லாம் அரசியல் கதையிலேயே உருவாகியிருந்தது.

இந்நிலையில் விஜய் எப்படி முதலில் படத்திலிருந்து அரசியல் பேச ஆரம்பித்தாரோ, தற்போது கீர்த்தி சுரேஷும் விஜயின் அதை ஃபார்முலாவை பின்பற்ற தொடங்கியுள்ளார். ஆனால் கீர்த்தி சுரேஷ் இந்த மாதிரியான படங்களில் நடிப்பதற்கு, பின்னாலிருந்து Key கொடுப்பது நடிகர் விஜய் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது சமீப காலமாகவே கீர்த்தி சுரேஷ் தமிழ்நாட்டில் தேர்வு செய்து நடக்கும் படங்கள் எல்லாம் புரட்சிகரமாகவே இருக்கும்.

குறிப்பாக மாமன்னன், சர்க்கார், சரோஜாதேவியின் வாழ்க்கை வரலாறு, தற்போது ரகு தாத்தா என, ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படங்களிலும், அரசியல் அதிகம் பேசப்படும் படங்களில் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் இதற்கு காரணமே நடிகர் விஜய் தான் என்றும், அவர்தான் இந்த மாதிரியான அரசியல் படங்களில் நடிக்க சொல்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

ஏனெனில் எதிர்காலத்தில், விஜய் தொடங்கியுள்ள கட்சியில் கீர்த்தி சுரேஷ், கொள்கை பரப்பு செயலாளராகவோ, நட்சத்திர பேச்சாளராகவோ அல்லது, வேறு சில முக்கிய பொறுப்புகளிலோ அமர்த்தப்படுவார் என சொல்லப்படுகிறது. இதனால் தான் நடிகர் கீர்த்தி சுரேஷ் அரசியல் கதை நிறைந்த படங்களை தேர்வு செய்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில், விஜயிடம் உங்கள் கட்சி பெயர் நல்லா இருக்கிறதே, எனக்கு ஒரு சீட்டு போட்டு கொடுங்கள் என கேட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர் ஒருவர், ரகு தாத்தா படத்தில், இந்தி திணிப்பு பற்றி பேசி உள்ளீர்கள். அது அரசியல் டிரெண்ட்டாக போகிறதே என்று கேள்வி எழுப்பியதோடு, விஜய் சார் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார், நீங்கள் அவருடன் நட்பாக இருக்கிறீர்கள், இதனால் அவருடைய கட்சியில் இணைய போகிறீர்களா? என்ற கேள்வி கேட்டனர்.

இதனை கேட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்,இப்போதைக்கு நடிப்பு தான். அரசியல் ஆசை இருக்கு. வர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கு. எதிர்காலத்தில் அரசியலுக்கும் வரலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தான் ஏற்கனவே, விஜய் தான் எம்.ஜி.ஆர், கீர்த்தி சுரேஷ் ஜெயலலிதா என பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது இது உண்மையாக போகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.