வெங்கட் பிரபுவின் அடுத்தடுத்து தவறுகள்… செம்ம டென்ஷனில் விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் சரிவர போகவில்லை. இதில் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் கடும் எதிர் மறை விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை மாஸ்டர் படத்தின் மூலம் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய் உடன் இணைந்து லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் லியோ படத்தில் இணைந்துள்ளது அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மிக பெரிய அளவில் ஏற்படுத்தியது. அந்த வகையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல், அந்தப் படத்தின் டைட்டில் வெளியீடு,

காஷ்மீரில் படப்பிடிப்பு, திரும்ப சென்னையில் படப்பிடிப்பு, என லியோ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில். நடிகர் விஜய் தற்பொழுது நடித்துவரும் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்த அவருடைய 68 ஆவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ள தகவல் வெளியான பின்பு விஜய் நடிக்க இருக்கும் 68வது படத்திற்கான அப்டேட் மிகப் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் இந்த படத்தின் பூஜை கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்தப் படத்திற்கான விளம்பர போஸ்டரை மலேசியாவில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் அந்தப் படத்தை தயாரிக்க இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து வைத்தது. மேலும் விஜய் நடிக்க இருக்கும் 68-வது படத்திற்கான எதிர்பார்ப்பும் மற்றும் விவாதமும் பெரிய அளவில் நடந்து வந்தது. இதனால் லியோ படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் குறைந்தது.

இந்த நிலையில் தற்பொழுது வரை லியோ படத்திற்கான வெளிநாட்டு திரையரங்கு விற்பனை, சாட்டிலைட் விற்பனை, ஓடிடி விற்பனை என வியாபாரம் செம ஜோராக நடந்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்னும் தமிழ்நாட்டின் திரையரங்கு வியாபாரத்தை லியோ படத்தின் தயாரிப்பாளர் தொடங்கப்படவில்லை. இந்த சூழலில் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து, விஜய் நடிக்க இருக்கும் 68வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, லியோ பட கதயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட பலரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளது லியோ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட விஜய், அடுத்த தான் நடிக்கும் 68 வது படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாக கூடாது என்றும், லியோ படம் ரிலீஸ் ஆகும் வரை அமைதி காக்கும் படியும், மேலும் இந்த படத்திற்கான வேலைகளை மிக ரகசியமாகவும் வெளியில் யாருக்கும் தெரியாமலும் செய்ய வேண்டும் என விஜய் ரெம்ப ஸ்டிட்டாக சொல்லி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்ட விஜய் 68 படம் குறித்த படத்தின் தயாரிப்பு தரப்பும், வெங்கட் பிரபு அமைதி காத்து வந்த நிலையில், தற்பொழுது அந்த படத்திற்கான முழு ஸ்கிரிப் மற்றும் திரைக்கதை எழுதும் பணியில் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்கின்ற டிஸ்கசனில் வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளார். அப்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என வெங்கட் பிரபு அந்த டிஸ்கஷனில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் விஜய் 68ல் ஜோதிகா நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி பரபரப்பை ஏற்படுத்த, லியோ பட குழுவினரை மேலும் கோபமடைய செய்துள்ளது. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்படி மீடியாக்களுக்கு லீக் அவுட் ஆகிறது என வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். வெங்கட் பிரபு தரப்பிலிருந்து தாங்கள் ரகசியமாகத்தான் டிஸ்கஸ் செய்கிறோம் என்றும் சொன்னாலும் கூட, அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்யப்படும் விவரம் எப்படி வெளியில் வருகிறது என்கின்ற கோபம் வெங்கட் பிரபு மீது விஜய்க்கு மட்டுமல்ல லியோ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஸ்கஷன் செய்வதை கூட ரகசியமாக செய்து கொள்ளுங்கள் என்று மீண்டும் வெங்கட் பிரபுவுக்கு விஜய் தரப்பிலிருந்து உத்தரவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் விஜய் வெங்கட் பிரபு இணைய இருக்கும் விஜய் நடிக்கும் 68-வது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தாலும்,அதை கொண்டாட முடியாதபடி வெங்கட் பிரபுவுக்கு கடும் கட்டுப்பாடுகளை விஜய் விதித்துள்ளது வெங்கட் பிரபுவுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.