அப்பாவை உதறி தள்ளிட்டு வா… நான் இருக்கேன்… மகனுக்கு அம்மா சங்கீதா போட்ட கட்டளை….

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் நடிகர் விஜயும் ஒருவர். விஜய் நடித்த லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கோடிகளை குவித்து வருகிறது. ஒருபக்கம் நடிகர் விஜய் லியோ படத்தை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்திற்கான பூஜையில் கலந்து கொண்டு, ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார்.

மற்றொரு பக்கம் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், பிரபல லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு தந்தையும் மகனும் இரு வேறு துருவங்களாக அவரவர் வேலையில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

பொதுவாகவே, சினிமா பிரபலங்கள் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள், கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கும். நடிகர் விஜய் மட்டும் இதில் விதிவிலக்கு அல்ல. ஏற்கனவே, அப்பா சந்திரசேகருடன் விஜய் பேசுவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி பலரும் விஜயை கண்டபடி விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஜேசன் சஞ்சய்க்கும் நடிகர் விஜய்க்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லை என்றும், மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் மகன் சஞ்சய் அப்பாவிடம் பேசுவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இப்போது சஞ்சய்க்கு லைகா தயாரிப்பு நிறுவனத்தில், படம் இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சொல்லப்போனால், சஞ்சய்க்கு கிடைத்த வாய்ப்புக்கும் விஜய்க்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையாம். சங்கீதா தான் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக போராடியிருக்கிராரம். மகன் ஜேசன் சஞ்சய்க்கு வாய்ப்பு கிடைப்பதற்காக சங்கீத என்ன செய்தார் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தளபதி விஜயைப் போலவே, மகன் சஞ்சயும் சினிமாவில் ஹீரோவாக வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தன் தாத்தாவைப் போல் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சஞ்சய் கனடாவில் படிப்பை முடித்ததும் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஆம், சஞ்சய்க்கு சிறுவயதிலிருந்தே இயக்குனராக வேண்டும் என்பதே கனவாக இருந்தததாக, விஜயின் அம்மா ஷோபா பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லலாமல், இயக்குனராக வேண்டும் என்பதற்காக அமெரிக்கா, லண்டன் மற்றும் கனடா என வெளிநாடுகளில் ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பை படித்து முடித்துள்ளார். இதனையடுத்து, தமிழகத்திற்கு திரும்பிய ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கப் போவதாக வெளியாகிய தகவல்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

பிரபலங்களின் வாரிசு என்பதாலேயே எளிதில் திரையுலகில் நுழைந்து விடுகிறார்கள் என்றெல்லாம் பலவாறு சஞ்சய்யை நோக்கி பல விமர்சனங்கள் பாய்ந்தன. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாத சஞ்சய் படத்தை இயக்குவதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே, விஜய் சங்கீதா தம்பதியினரிடையே மனஸ்தாபம் இருப்பதாகவும், இதனால் சங்கீதா நடிகர் விஜயைப் பிரிந்து தன் மகள் திவ்யா ஷாஷா மற்றும் அப்பா சொர்ணலிங்கம் அவர்களுடன் லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு சங்கீதாவுடன் இருக்கும் மனக்கசப்பினாலேயே, அவரது மகன் சஞ்சயும் விஜயிடம் சரியாக பேசுவதில்லை என பரவலாகப் பேசப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், முதலில் சஞ்சய் படத்தை இயக்கப்போவது குறித்து விஜய்க்கு தெரியாது என்றும், லைகா நிறுவனத்தில் சஞ்சய்க்கு கிடைத்துள்ள வாய்ப்பானது, லண்டனில் உள்ள சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் அவர்களின் பரிந்துரையால் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. கூடவே, மகன் சஞ்சய்க்கு ஆதரவாக சங்கீதா இருந்து வருவதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் விஜய்க்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.