ஓன்று சேர்ந்த வாரிசுகள்… விஜய் மகன் இயக்கும் முதல் நடத்தில் நடக்கும் கூத்தை பாருங்க மக்களே..

0
Follow on Google News

நடிகர் விஜய் மகன் சஞ்சய்யை வைத்து படம் எடுக்க பல டைரக்டர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த போதும், நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என, டைரக்ஷனை ஜேசன் சஞ்சய் கையில் எடுத்திருக்கிறார். இந்நிலையில் இவர், படங்களை இயக்குவதற்காக, திரைப்பட தயாரிப்பில் டிப்ளமோ படிப்பும், லண்டனில் திரைப்பட இயக்கத்தில் பி ஏ படிப்பும் படித்து முடித்து இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சஞ்சய் முதலில் கனடாவில் Pull the Trigger என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். எனவே தான் தற்போது தனது முதல் திரைப்படம் தமிழில் தான் இருக்க வேண்டும் என, இவர் தமிழ் திரையுலகில் தற்போது டைரக்டராக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அதோடு இவரின் முதல் படத்திலேயே வாரிசுகளின் ஆதிக்கம் தலை விரித்த ஆடுகிறது. இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின், வில்லன், மியூசிக் டைரக்டர் என அனைவருமே பிரபல நடிகர்களின் வாரிசுகள் தான் என்றும், அந்த நான்கு வாரிசுகள் யார் யார் என்ற தகவலும் வெளியாகி பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைய காலகட்டத்தை பொறுத்தவரை அரசியலில் தான் நெப்போட்டிசம், அதாவது, வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால், தமிழ் திரை துறையிலும் நெப்போட்டிசம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த வாரிசு ஆதிக்கத்தால், சினிமாவுக்கு நடிக்க வரும் புதுமுக நடிகர்கள், நல்ல நடிப்பு திறமை இருந்தாலும், சினிமா துறையில் பின் தள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக விஜயின் தந்தையால் விஜய் ஹீரோவாகவும், விஜயால் தற்போது அவரது மகனும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அதேபோல் நடிகர் சிவகுமாரால், சூர்யாவும், கார்த்தியும்.. நடிகர் விஜயகுமாரால், அவரது ஒட்டுமொத்த குடும்பமும்.. நடிகர் விக்ரமால், துருவ் விக்ரம்.. விஜய் சேதுபதியால், சூர்யா சேதுபதி என, இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு தமிழ் சினிமா துறையில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதில் முழுவதுமே வாரிசு நடிகர்கள் தான். ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் நடிகர் கவின் தான் ஹீரோ என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது பேச்சுவார்த்தை மட்டும் தான், அந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தான் கடைசியாக தனது படத்திற்கு ஹீரோ, ஹீரோயின், வில்லன், மியூசிக் டைரக்டரை தேர்வு செய்த ஜேசன் சஞ்சய், அந்த நான்கு பேருமே தமிழ் திரையுலகின் முன்னணி திரை பிரபலங்களின் வாரிசுகள் தான் என தெரிய வந்திருக்கிறது. முதலில் இவரே விஜயின் வாரிசு தான், இந்த படத்தின் டைரக்டர் ஆன ஜேசன் சஞ்சய் ஒரு முன்னணி நடிகரான விஜய்யின் வாரிசு. இரண்டாவதாக இந்த படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், இவர் நடிகர் சீயான் விக்ரமின் வாரிசு.

மூன்றாவதாக இந்த படத்தின் ஹீரோயினாக அதிதீ சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், இவரும் பிரபல டைரக்டர் ஷங்கரின் வாரிசு. குறிப்பாக ஜேசன் சஞ்சய், சமீபத்தில் நடந்துமுடிந்த சங்கர் மகளின் திருமண நிகழ்ச்சியில் கூட பங்கேற்று, அதிதீ சங்கருடன் இணைந்து புகைப்படம் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் தான் இந்த படத்தின் ஹீரோயின் என்றும் உறுதியாகியுள்ளது.

நான்காவதாக இந்த படத்தின் வில்லனாக சூர்யா சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இவர் விஜய் கே வில்லனாக நடித்த பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் வாரிசு. அடுத்து ஐந்தாவதாக பிரபல இசையமைப்பாளரின் மகனான ஏ ஆர் அமீன், இவர் தான் இப்படத்தின் மியூசிக் டைரக்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இசைப்புயல் மற்றும், ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரகுமானின் வாரிசு, இப்படி இந்த படத்தின் அனைத்து கேரக்டர்களுமே வாரிசு நடிகர்கள் என்பதால், நெட்டிசன்கள் இந்த படத்திற்கு பெயரே நெப்போ கிட்ஸா என்றும் கலாய்த்து வருகின்றனர்.