ஒன்றெல்ல இரண்டு பெண்களாம்… விஜய் சேதுபதியின் கூடவே இருக்கும் இரண்டு பெண்கள் யார் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னையில் பட்ட படிப்பு முடித்து துபாயில் வேலை செய்து வந்த விஜயசேதுபதி, பின் வேலை பிடிக்காமல் சென்னை வந்தவர் சினிமா துறையில் நுழைந்தார், தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நண்பராக சில காட்சிகளில் ஒரு ஓரமாக இடம் பிடித்திருப்பார், இதே போன்டர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார்.

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டபட்டுள்ளார். இடையில் சிறு சிறு வேடங்கள் கூட கிடைக்காமல் வருமானம் இல்லாமல் சாப்பிட பணமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அதே சமயம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக்காக போராடி வந்த விஜய்சேதுபதி ஒரு கட்டத்தில் சினிமா துறையை விட்டு வெளியேறி மற்றொரு வேலைக்கு செல்ல தயாராகி வேலையும் தேட தொடங்கியுள்ளார்.

அப்போது தான் அவருக்கு தென் மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பை அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்தார். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதில் கதாநாயகனாக நடித்த விஜய்சேதுபதிக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது. இதனை தொடர்ந்து கடும் போராட்டத்துக்கு பின்பு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து எந்த ஒரு கதாபத்திரமாக இருந்தாலும் தன்னுடைய இமேஜை பற்றி சிந்திக்காமல் நடித்து வந்தார்.

இந்நிலையில் சுமார் 17 கோடி வரை சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி இது வரை இயல்பாக அனைவரிடம் பழகி வந்த நிலையில் தற்பொழுது அவருடைய நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, தனக்கு உதவியாளராக இரண்டு பெண்களை நியமித்துள்ள விஜய் சேதுபதி, புதிய படத்திற்க்கு கதை சொல்ல வரும் இயக்குனர்கள் விஜய் சேதுபதியை தனியாக சந்தித்து கதை சொல்ல விரும்பினாலும் அதற்கு வாய்ப்பில்லை என்றும்.

விஜய் சேதுபதி கூடவே இருக்கும் அவருடைய உதவியாளர்களான அந்த இரண்டு பெண்களும், இயக்குனர் விஜய் சேதுபதியிடம் கதை சொன்னால், தனது உதவியாளரிடம் கதை சொல்லுங்க என்கிறாராம் விஜய் சேதுபதி, மேலும் ஹிந்தி படப்பிப்புக்கு முன்பை செல்லும் போதும் அந்த இரண்டு பெண் உதவியாளர்களை கூடவே அழைத்து செல்கிறாராம் விஜய் சேதுபதி. அந்த அளவுக்கு உதவியாளராக இருக்கும் இரண்டு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி என கூறப்படுகிறது.