எனக்கு திரிஷாவுக்கு என்ன உறவு…பரபரப்பாக பேசப்படும் கிசு கிசுக்கு பதிலளித்த விஜய்..

0
Follow on Google News

திரைப்பட நடிகர்கள் என்றாலே, அவர்கள், எவ்வளவு பெயரும், புகழும் சம்பாதித்திருக்கிறார்களோ, அதற்கேற்பவே, அவப்பெயர்களையும், சர்ச்சைகளையும் சம்பாதித்து விடுவார்கள். அதிலும் கோலிவுட்டின் நம்பர்.1 நடிகராக வலம் வரும் விஜய்க்கு சொல்லவே வேண்டியதில்லை, பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும்…

அப்படிதான் கடந்த வாரம் முழுவதுமே, விஜயும், திரிஷாவும் காதலிக்கிறார்கள் என சோசியல் மீடியாவே பற்றி எறிந்தது. இந்நிலையில் தான் நடிகர் விஜய், பற்றி எறிந்த அந்த தீயை அணைக்கும் விதமாக, இந்த சர்ச்சைக்கு தரமான பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான நடிகர் விஜய், 1999 ஆம் ஆண்டு அவரது மனைவியான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்,

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் தனது நடிப்பு திறமையால் வளர வளர, அவரை பற்றிய பல கிசுகிசுப்புகளும் வளர்ந்து வருகிறது. அதிலும் நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்தியும் அவ்வப்போது பரவிக் கொண்டே தான் இருக்கும்.

அந்த வதந்தி போல தான், விஜய்- திரிஷா வதந்தியும்… அவர்கள் குருவி, கில்லி போன்ற படங்களில் நடித்ததில் இருந்தே இருவரும் காதலிக்கிறார்கள் என பல வதந்திகள் பரவி வந்ததும் கவனிக்கத்தக்கது. மேலும் நடிகர் விஜய் கடந்த வாரம் ஜூன் 22ஆம் தேதி, தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அப்போது திரிஷா, பிறந்தநாள் அன்று கூட்டத்தோடு கூட்டமாக வாழ்த்து தெரிவிக்காமல், தனிக்காட்டு ராஜா போல, பிறந்தால் முடிந்த மறுநாள், தானும், விஜயும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்ததோடு,

அதனுடன் சேர்த்து, ‘நீதான் என் காதல், என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல், என்ற வரிகள் அடங்கிய ஆங்கில பாடலையும் இணைத்திருந்தார்.. இந்நிலையில் தான் விஜயும், த்ரிஷாவும் காதலிப்பது உறுதியாகிவிட்டது என, அவர்களின் பழைய புகைப்படங்களை தோண்டி தோண்டி பார்த்த நெட்டிசன்கள், த்ரிஷாவின் பல புகைப்படங்களில் விஜய்யும் இருக்கிறார், அவரது ஷூவும் அதில் தெரிகிறது.

மேலும் த்ரிஷா சென்ற அதே Location-களுக்கு விஜயும் சென்றிருக்கிறார், விஜயின் அப்பார்ட்மெண்டில் தான் த்ரிஷா குடியிருக்கிறார், அதோடு த்ரிஷாவிற்கு விஜய் வைர நெக்லஸ் பரிசளித்திருக்கிறார் என, பல தகவல்களை திரட்டி Something something என விமர்சித்து வந்தனர். அதோடு நடிகர் விஜய் திரிஷாவை வற்புறுத்தி GOAT படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு பல சர்ச்சைகள் கிளம்பியதால் தான், நடிகர் விஜய் நேற்றைய தினம் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னை திருவான்மயூரில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று, அந்த மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தியதோடு, ஒரு குட்டி ஸ்பீச் ஒன்றும் கொடுத்திருந்தார்.

அதில் அவர் முதலில், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி ஆளும் அரசை விமர்சிப்பது போல் பேசி, பிறகு அவர்களை விமர்சித்து எந்தப் பயனும் இல்லை, நாம் தான் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் பேசியிருந்தார். பின்னர் ,தன்னையும், த்ரிஷாவையும் பற்றி வதந்தி பரப்புபவர்களையும் சூசகமாக, சோசியல் மீடியாவில் பலர் புரணி பேசுகிறார்கள், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள்,

நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள், ஒரு சேனலில் ஒரு விதமாக இருக்கும் அதே செய்தி, இன்னொரு சேனலில் வேறு விதமாக இருக்கும். நாம் தான் சோசியல் மீடியா செய்திகளில் எது உண்மை, எது பொய் என சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று, பிறருக்கு அறிவுரை கூறுவது போல் கூறி, தன்னையும், திரிஷாவையும் சேர்த்து வைத்து பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் என, அந்த சர்ச்சைக்கும் எண்டு கார்டு போட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here