காப்பியடித்து எடுக்கப்படும் விஜய் நடிக்கும் வாரிசு….வெளியான பரபரப்பு இது எந்த படத்தின் காப்பி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்த படத்தில் நடிகை ரஷ்மிக்கா மந்தன்னா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார்,யோகி பாபு. நடிகைகள் குஷ்பு, சங்கீதா கிரிஷ் மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படம் செண்டிமெண்ட் கலந்த குடும்ப படம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு வந்த படம் கிரி, இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது, இரண்டு கிராமத்தை சேர்ந்த விணுசக்கரவர்த்தி மற்றும் பெப்சி விஜயன் இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் பெப்சி விஜயனின் ஒரு மகன் இறந்து விடுகிறான், இதனால் வினு சக்கரவர்த்தியின் வாரிசுகளை அழிப்பேன் என சபதம் எடுக்கிறார் பெப்சி விஜயன், இதனை தொடர்ந்து தனது வாரிசான மகன் பிரகாஷ்ராஜை தலைமறைவாக வளர்க்கிறார் வினு சக்கரவர்த்தி.

ஒரு கட்டத்தில் வினு சக்கரவர்த்தி மகன் தான் பிரகாஷ்ராஜ் என்பதை கண்டறிந்த பின்பு பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு பிரகாஷ் ராஜ் – தேவயானி மகனான சிறுவன் கிரி, அதாவது விணுசக்கரவர்தியின் வாரிசான அந்த சிறுவனை கொலை செய்ய துடிக்கிறான் வில்லன், அந்த வில்லனிடம் இருந்து விணுசக்கரவர்த்தி வாரிசை நடிகர் அர்ஜுன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் சுந்தர் .சி இயக்கத்தில் வெளியான கிரி படத்தின் கதை.

இந்நிலையில் தற்பொழுது விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் கதை என்ன என்பது குறித்து பரபரப்பான தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. அதில் வாரிசு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கிரி பட கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ள நிலையில், பிரபல தொழில் அதிபருக்கும் வில்லனுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த தொழிலதிபர் எதிரிகளால் கொலை செய்யப்படுகிறார்.

ஆனால் அந்த தொழிலதிபருக்கு கிரி படத்தில் விணுசக்கரவர்திக்கு எப்படி ரகசியமாக பிரகாஷ்ராஜ் என்கிற மகன் ரகசியமான வாரிசாக இருந்தார், அதே போன்று இவருக்கும் ரகசிய வாரிசு இருக்கிறது. தொழில் அதிபர் கொலை செய்வதற்கு முன்பே ஒரு சில காரணங்களால் அவரின் வாரிசு யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டு வருகிறார். இந்த தகவல் படத்தின் வில்லனுக்கு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து.

தொழிலதிபரின் வாரிசை அழிக்க தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் அந்த படத்தின் வில்லன். இதில் அந்த வாரிசை கண்டுபிடித்து என்ன செய்கிறான் வில்லன் என்பது தான் படத்தின் கதை என விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் கதை என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 18 வருடத்துக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கிரி படத்தின் கதையை காப்பியடித்து படம் எடுக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசனுக்கு அந்த மாதிரி நோய்.. இனி அவரால் அதை மட்டும் செய்ய முடியாது.. எதை தெரியுமா.?