பல முறை என்னிடம் விஜய் கேட்டார்….நான் சம்மதம் தெரிவிக்கவில்லை… போட்டுடைத்த நடிகை சங்கீதா

0
Follow on Google News

சென்னையில் பிறந்த நடிகை சங்கீதாவின் தாத்தா பிரபல சினிமா தயாரிப்பாளர் சுமார் 20 க்கு மேற்பட்ட தமிழ் படங்களை இவர் தயாரித்து உள்ளார். சங்கீதாவின் தந்தையும் பல படங்களை தயாரித்து இருக்கிறார். நடிகை சங்கீதா சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை முறையாக கற்று ஒரு பரதநாட்டிய கலைஞனாகவும் திகழ்ந்தார்.

90 காலகட்டத்தில் நடிகையாக தன்னுடைய நடிப்பு தொழிலை தொடங்கிய நடிகை சங்கீதா ஆரம்ப கட்டத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியை தழுவியது. இயக்குனர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்து தேசிய விருதும் பெற்றார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சங்கீதா நடித்த பின்பு தான் அவருக்கான அங்கீகாரம் கிடைத்தது.

அதன் பின்பு தமிழில் சில படங்கள் சங்கீதா நடித்திருந்தாலும். பிதாமகன் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் மற்ற எந்த படத்திற்கும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ வாரிசு’ திரைப்படத்தில் கூட விஜய்யின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை சங்கீதாவுடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த மொழி படம் பண்ண வேண்டும் என்கின்ற ஆசை என கேட்டதற்கு நிச்சயமாக எனக்கு தமிழ் படத்தில் நடிக்க தான் மிகவும் ஆசை. ஆனால் தமிழில் எனக்கு நடிக்கவே பிடிக்காது ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் பொழுது அங்கே கொடுக்கும் மரியாதை தமிழ் சினிமாவில் கொடுப்பதில்லை என தெரிவித்த சங்கீதா.

இதனால் தமிழ் மக்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் எனக்கு பரவாயில்லை இங்க அவமரியாதையைத்தான் நான் நிறைய சந்திச்சிருக்கேன் என தன்னுடைய மனக்குமுறலை கொட்டி தீர்த்தார் சங்கீதா இந்நிலையில் நடிகை சங்கீதா க்ரிஷ் விஜய் குறித்து பேசிய சில தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர் “எனக்கும், விஜய்க்கும் நீண்ட காலமாகவே நட்பு இருக்கிறது. சின்ன வயசுல இருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக தான் வளர்ந்து வருகிறோம்.

எனக்கு அமைதியாக இருக்கும் விஜயை பெரிய அளவில் தெரியாது. கலாட்டா செய்யும் விஜய் தான் என்னுடன் அதிகமாக இருந்தார். நான் கிரிஸை பாடுவதற்கு கலாய்க்கும் போது கூட ரசனை கெட்டவளா இருக்க என என்னை அடிக்கடி கூறுவார். இருந்தும் நான் விஜய்யுடன் எந்த பாடலிலும் நடனம் ஆடவில்லை. எனக்கு விஜய்யுடன் தனி பாடலுக்கு நடனமாட நாலுமுறை வாய்ப்பு வந்தது. எல்லா தடவையுமே விஜய் தான் என்னிடம் கேட்பார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுவேன்.

ஒரு முறை அவர் மனைவி சங்கீதா என்னிடம் கால் செய்து அவரே கேட்டு ஏன் முடியாது எனக் கூறினாய் எனக் கேட்டார். இல்லப்பா நான் இப்பதான் சினிமாவில் வளர்ந்து கொண்டு வரேன். விஜய் உடன் ஒரு நடனம் ஆடினால் அது பிரபலமாகிடும். பின்னால் என்னால் வளரவே முடியாது ஒரே பாடலுக்கு நடனமாடும் நிலைமை வந்துவிடும். அதனால் தான் முடியாது என கூறினேன். எனக்கே சங்கடமாக தான் இருக்கு அவரிடம் சொல்லி புரிய வையுங்க என்றேன் என நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.