இயக்குனர் பாரதிராஜா மனதை வேதனை அடைய செய்த நடிகர் விஜய்… என்ன தான் இருந்தாலும் விஜய் இப்படி செய்யலாமா..

0
Follow on Google News

ஒரு காலத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் குடியிருக்கும் பகுதியில் அக்கம் பக்கத்தில் குடியிருப்பு வாசிகள், நடிகர், நடிகைகள் வீட்டின் அருகில் குடியிருப்பதையே பெருமையாக கருதினார்கள், ஆனால் இன்று சினிமா நடிகர்கள் ஒரு இடத்தில் குடியிருக்கிறார்கள் என்றால், அக்கம் பக்கத்தினர் ஏன்டா இந்த சினிமா நடிகர் நடிகைகள் நம்ம தெருவுக்கு குடிக்கு வந்தார்கள், எப்பதான் இவர்கள் காலி செய்து போவார்கள், அல்லது நாம் தான் காலி செய்து போக வேண்டும் என்று மிகுந்த வேதனை அடையும் வகையில் அமைந்துள்ளது சினிமா துறையினர் செய்யும் அட்ராசிட்டி.

அதாவது மிகப் பெரிய செலிபிரிட்டியாக இருந்தால் நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமாக மிகப்பெரிய இடத்தில் பங்களாவாக கட்டி யாருக்கும் தொல்லையில்லாமல் நடிகர்கள் சென்று விட்டால் யாருக்குமே தொல்லை இல்லை. நகருக்குள் நடிகர்கள் குடியிருக்கும் போது தான் அக்கம் பக்கத்தினர் குடியிருக்க முடியாத அளவிற்கு பெரும் தொல்லை தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கும் போயஸ் கார்டனில் சமீபத்தில் நடந்த ஒரு பண்டிகை விழாவிற்காக அங்கே அவருடைய ரசிகர்கள் கூடி நின்று, தலைவா தலைவா என கூச்சலிட, அங்கே அக்கம் பக்கத்தில் இருந்த ஒரு வயதான மூதாட்டி வெளியே வந்து, அங்கிருந்த ரசிகர்களை கழுவி கழுவி ஊத்திய சம்பவம் அரங்கேறியது. அக்கம் பக்கத்தினர் கழிவி கழுவி ஊத்துகிறார்கள் என்றால் ரஜினியால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு தான் இது.

அதுவும் தற்பொழுது நயன்தாரா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் அவர் செய்யும் அட்ராசிட்டி, அய்ய்யோ தாங்க முடியலடா சாமி என அந்த அப்பார்ட்மென்டில் குடியிருக்கும் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள், குறிப்பாக இதுவரை 50க்கு மேற்பட்ட புகார் நயன்தாரா மீது அங்கே குடியிருக்கும் மக்கள் அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்துக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இருந்தும் வேறு ஒருவராக இருந்தால் நடவடிக்கை எடுக்கும் அப்பார்ட்மெண்ட் நிர்வாகம், நயன்தாரா ஒரு செலிபிரிட்டி என்பதால் அவருக்கு வார்னிங் கொடுக்க கூட தயங்குகிறது அப்பார்ட்மெண்ட் நிர்வாகம்.

அதாவது அந்த அப்பார்மெண்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்கு இரண்டு கார் தான் உள்ளே பார்க் செய்யவேண்டும் என்கிற ஒரு விதி இருந்தாலும் கூட, நயன்தாரா 4 கார்களை உள்ளே விதிகளை மீறி பார்க் செய்து வைத்துள்ளாராம். இந்நிலையில் போயஸ் கார்டனில் நயன்தாரா புதிய வீடு ஒன்றை வாங்கி விரைவில் அங்கே குடியேற இருப்பதால், தற்பொழுது நயன்தாரா குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வாசிகள், விரைவில் நயன்தாரா இங்கே காலி செய்து விட்டு போயஸ் கார்டன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிராத்தனை செய்யும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜயின் அட்ராசிட்டி குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் ஒரே தெருவில் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீட்டில் குடியிருந்துள்ளனர், அப்போது விஜய் தன்னுடைய வீட்டின் கம்பொன்ட் சுவரை ஒரு கோட்டை சுவர் போன்று எழுப்பி, வெளியில் இருந்து யாராவது ஏணி வைத்து தான் பார்க்க முடியும் அளவுக்கு கோட்டை போன்று சுவரை எழுப்பியுள்ளார்.

அருகில் குடியிருக்கும் பாரதிராஜா வீட்டில் இருந்து கூட விஜய் வீட்டை யாரும் பார்க்காதபடி கம்பொன்ட் சுவரை எழுப்பியுள்ளார் விஜய், இதனால் விலசமாக நான்கு திசையிலும் இருந்து வர கூடிய காற்றும் பாரதி ராஜா வீட்டிற்குள் வராதபடி அமைத்துள்ளது விஜய் எழுப்பிய கம்பொன்ட் சுவர், பாரதி ராஜாவும், என்னடா, இந்த பையன், இப்படி இருக்கான், அப்படி என்ன அவர் வீட்டின் உள்ளே பார்த்து விட போகிறோம், என மிகுந்த வேதனை அடைந்தாராம்.