இப்படி நாசமா போக விஜய் தான் காரணம்… கொட்டி தீர்க்கும் யுவன் சங்கர் ராஜா…

0
Follow on Google News

இயக்குனர் வெங்கட் பிரபு -விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், மூன்றுமே ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

நடிகர் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் மாஸ் பிஜிஎம் போட்டு தல ரசிகர்களை குஷிப் படுத்திய யுவன், என் விஜய்க்கு மட்டும் இப்படி சொதப்பி வைத்திருக்கிறார் என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜா பாடல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருப்பது போலவே யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

குறிப்பாக இளைஞர்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசை மனதில் வலியை போக்கும் மருந்தாக இருப்பதாக கூறுவது உண்டு. இயக்குனர் வசந்த் என் இயக்கத்தில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமடைந்த யுவன், அடுத்தடுத்த படங்களில் தனது எளிமையான மூலம் ரசிகர்களை கட்டி போட்டார்.இயக்குனர் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பாடல்கள் அத்தனையுமே செம ஹிட் தான்.

அதேபோல, இயக்குனர்,ராம்,விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு அமீரென பல இயக்குனர்களின் கூட்டணியில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது.இப்படி தனது தனித்துவமான இசை ரசிகர் பட்டாளத்தை ஈர்த்துக் கொண்டார். அதன் பிறகு, கடந்த சில வருடங்களாக யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் பழைய யுவன் வேண்டும் என்று கம்பேக் கொடுக்க சொல்லி வலியுறுத்தினார்கள். அதன் பிறகு, கோமாளி பட இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா கம்பேக் கொடுத்திருந்தார்.அதன் பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை தன்வசம் ஈர்த்தார். இப்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

விஜய் யுவன் கூட்டணியில் நீண்ட காலத்திற்கு பிறகு படம் வெளியாவதால் பாடல்கள் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை வெளியான மூன்று பாடல்களுமே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் கோட் படத்தின் பாடல்கள் கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் யுவன் சங்கர் ராஜாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாகவும், ‘ஒரு சிச்சுவேஷன் சொல்லி இசையை கேட்கிறார்கள்.

நான் சில ட்யூன்களை அனுப்புகிறேன். அவற்றை விஜய் தான் செலக்ட் செய்கிறார்.அவர் ஓகே பண்ண பாடல்கள் தான் இவை. இதற்கு முன்பு ஸ்டார் படத்திற்கு நான்தான் இசை அமைத்தேன். அவையெல்லாம் நல்ல ரீச் கொடுத்தன. என் வேலையை ஃப்ரீயாக செய்ய விட்டாலே பெஸ்டான மியூசிக்கை என்னால் கொடுக்க முடியும்’ என்றெல்லாம் யுவன் அவர் நண்பரிடம் புலம்பி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது இடையில் மார்க்கெட் இழந்த யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் கம் பேக் கொடுக்கும் விதத்தில் அவருடைய இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கோட் படத்தில் விஜய் உள்ளே புகுந்து, யுவன் சங்கராஜாவை சுதந்திரமாக இசை அமைக்க விடாமல் நாசம் செய்தது, தற்பொழுது யுவன் சங்கர்ராஜாவுக்கு மிக பெரிய வீழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.