போன் செய்தால் கட் செய்து விடுவது… நம்ப வைத்து முருகதாஸை ஏமற்றிய விஜய்.. பரிதாபத்தில் முருகதாஸ்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடித்த தீனா படத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானவர் ஏ .ஆர்.முருகதாஸ். முதல் படமே மிக பெரிய ஹிட் கொடுத்து முதல் படத்திலே தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். இதன் பின்பு முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை முன்னனி இயக்குனர் வரிசையில் இடம்பெற செய்தது.

இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தை நடிகர் அமீர்கான் நடிப்பில் இந்தியில் இயக்கினார் முருகதாஸ். இந்த படத்திற்கு பின்பு இந்தி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து அங்கேயும் இயக்குனராக ஒரு ரவுண்டு வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன், வில்லு, வேட்டைக்காரன், சுறா ,வேலாயுதம் என்று தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்து வந்த விஜய்க்கு சோதனைகள் நிறைந்த காலம் அது.

அப்போது இந்தி, தமிழ் ,தெலுங்கு என் உச்சத்தில் இருந்து வந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி, வீழ்ச்சியில் இருந் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு மறுவாழ்வு கொடுத்த படம் துப்பாக்கி. இந்த படத்துக்கு பின்பு மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கத்தி, சர்க்கார் என இந்த கூட்டணியில் அடுத்தடுத்து படங்கள் வெளியானது.

இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தார் போது தர்பார் படத்தை முடித்துவிட்டு அடுத்த முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் இணைந்து படம் நடிக்க விரும்பிய விஜய் நேரில் முருகதாஸை அழைத்து கதை கேட்டு ஓகே செய்துவிட்டு தர்பார் முடித்துவிட்டு வாங்க பண்ணலாம் என தெரிவித்துள்ளார் விஜய்.

ஆனால் தர்பார் படம் தோல்வியை தழுவியதும், ஒரு தோல்வி படம் கொடுத்த இயக்குனரிடம் மீண்டும் இணைவதா.? என முருகதாஸை கழட்டி விட முடிவு செய்து, தனக்கு கதை பிடிக்கவில்லை. அதனால் இந்த படத்தை ட்ராப் செய்வதாக தெரிவித்துள்ளார் விஜய். அத்துடன் இந்த படம் கைவிடப்பட்டது. இதனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு துப்பாக்கி படம் மூலம் சினிமாவில் அவரை மீட்டெடுத்தவர் முருகதாஸை கைவிட்டு நன்றி மறந்த விஜய்யின் செயல் முருகதாஸுக்கு மிக பெரிய மன உளைச்சலை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக தன்னுடைய இயக்கத்தில் இதற்கு முன்பு நடித்து வெற்றி பெற்ற பல நடிகர்களை தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டுள்ளார் முருகதாஸ். அந்த வரிசையில் நடிகர் அஜித்தை முருகதாஸால் நெருங்க கூட முடியவில்லை. ஏழாம் அறிவு, கஜினி போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை நடிகர் சூர்யாவுக்கு கொடுத்தவர் முருகதாஸ், அந்த வகையில் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குவதற்கு சூர்யாவிடமும் கால்ஷீட் கேட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ், ஆனால் அவரும் கொடுக்கவில்லை.

இதன் பின்பு நடிகர் விக்ரம் தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டு உள்ளார். ஆனால் அடுத்தடுத்து நடிகர் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது முருகதாஸ் தொலைபேசி அழைப்பை கூட எடுக்காமல் புறக்கணித்து வந்துள்ளார் விக்ரம். இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களால் கைவிடப்பட்ட முருகதாஸுக்கு கை கொடுத்து கொடுக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் கள் சீட் கொடுத்துள்ளார்.

தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தை முடித்தவுடன் முருகதாஸ் இயக்கம் புதிய படத்தின் படிப்பு தொடங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பிரமிக்கும் வகையில் தன்னுடைய முழு திறமையும் முருகதாஸ் காட்ட இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் தற்பொழுது இருந்து மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.