அய்யோ .. என்ன செய்வதென்று தெரியலையே… விஜய்யை வைத்து காஷ்மீரில் புலம்பி தவிக்கும் லோகேஷ் கனகராஜ்..

0
Follow on Google News

விஜய் நடிக்கும் லியோ படத்தின் பட குழு காஷ்மீர் சென்றுள்ளது. விஜய் , திரிஷா , லோகேஷ் கனகராஜ் உட்பட பட குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளவர், அங்கே 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள். ஸ்ரீநகரில் உள்ள நட்சதிர ஓட்டல் ஒன்றில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் உட்பட நட்சத்திரங்கள் மட்டும் அங்கே தங்கி வருகிறர்கள். மற்றவர்கள் அருகில் உள்ள வேறு ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்,

இந்த நிலையில் காஷ்மீரில் குளிர் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது, இதனால் குளிர் தாங்க முடியாமல் தவித்து வந்த நடிகை திரிஷா, விஜய் ஆகியோர் படப்பிடிப்பு இடைவேளையில் விறகுகளால் பற்ற வைத்த நெருப்பில் இருவரும் குளிர் காய்ந்து வருகிறார்கள், இதில் விஜய் ஓரளவுக்கு குளிரில் தாக்கு பிடித்து விடுகிறார், ஆனால் திரிஷா மிகவும் சிரமப்பட்டு வந்தார்,

இந்நிலையில் குளிர் தாங்க முடியாமல் என்னுடைய காட்சி படமாக்கப்படும் பொழுது தகவல் சொல்லுங்க, அப்போது வருகிறேன் என படக்குழுவுக்கு டாட்டா காண்பித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளார் திரிஷா. இந்த நிலையில் நாளுக்கு நாள் காஷ்மீரில் குளிர் அதிகரித்து கொண்டே செல்கிறது, அங்கே தற்பொழுது சுமார் 7 முதல் 10 டிகிரி வரை குளிர் உள்ளது.

இதனால் பிற்பகல் வரை படப்பிடிப்பு தொடங்கப்படாமலே மிக பெரிய சிரமத்துக்கு உள்ளாகி யுள்ள பட குழு நண்பகல் குளிர் குறைந்ததும் பட பிடிப்பு தொடங்கப்படுகிறது. இதனால் தினமும் சுமார் 4 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 60 நாட்களுக்குள் படத்தை எடுத்து முடிக்க முடியாத சுழல் ஏற்பட்டுள்ளதால்,நடிகர் விஜய்யை அருகில் வைத்து கொண்டு புலம்பி தவித்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.