விஜய் சோழிய முடிக்க இவர் ஒரு ஆளே போதும்…புஸ்ஸி ஆனந்த் செயலால் விஜய்க்கு ஏற்படும் சிக்கல்..

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இவ்வாறு கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈர்த்துள்ள லியோ, நடிகர் விஜயின் “கரியர் பெஸ்ட்” படமாகவும், வசூலில் கோடிகளை குவிக்கும் படமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கிடையில், லியோ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவ்வப்போது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. அந்த வகையில், லியோ முதல் அப்டேட்டை மிஷ்கின் தான் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க லியோ படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார். இயக்குனர் மிஷ்கின் பாசத்தை போதும் என்று சொல்லுமளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்டவராம். அதேசமயம், யாராவது தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டால் பல மடங்கு கோபத்தை வெளிக்காட்டுவாராம். “சிரிச்சா தங்கம், முறைச்சா சிங்கம்”ங்கற மாதிரி இவரு கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கணும்னு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படி இருக்கையில், இயக்குனர் மிஷ்கினிடம் பத்திரிக்கையாளர்கள் “லியோ படத்தை பார்த்து விட்டீர்களா? ” என்று கேட்டதற்கு அவர் “என் தம்பி பார்த்துவிட்டான். அவன் நல்லா இருக்குனு சொன்னான்” என்று பதிலளித்திருக்கிறார். இப்போது, இதிலென்ன பிரச்சினையென்றால், “தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களை ஒரு சாதாரண இயக்குனர் ஒருமையில் பேசுவதா?” என்றவாறு விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மேலும், ஆவேசத்தின் உச்சத்திற்கு சென்ற சில விஜய் ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அவரை இழிவு படுத்தி வருகின்றனர். ஒருவர் மீது இருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதற்காக மற்றவரை கொச்சைப்படுத்துவது எவ்வளவு தரங்கெட்ட செயல்? நடிகர் விஜய் ரசிகர்களின் இத்தகைய செயல்களைக் கண்டு பொங்கிய ஒரு பத்திரிக்கையாளர், இது எப்பேற்பட்ட ஒரு கீழ்த்தனமான செயல் என்று பேசியிருக்கிறார்.

இந்த விஷயம் விஜய் காதுக்கு போகாமால் இருந்திருக்காது, இருப்பினும் நடிகர் விஜய் ரசிகர்களின் வெறிச்செயலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றால், இது அவரது எதிர்கால அரசியலுக்கு சரியானதாக இருக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நடிகர் விஜயின் அரசியல் நகர்வுக்கு மக்கள் பலரும் ஆதவளித்து வரும் நிலையில், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்சினையை பார்த்தும் கண்டுகொள்ளாத விஜய், எதிர்காலத்தில் நாட்டில் நடக்கும் பிரச்சினையை எப்படி தட்டிக் கேட்பார் என்றும் விவாதம் நடைபெறுகின்றன.

அதுமட்டுமின்றி, நடிகர் விஜயின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் புஸ்ஸீ ஆனந்த்தான் ஒரு கட்டத்தில் விஜய்க்கு குழிபறிப்பார் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இயக்குனர், மிஷ்கின் நடிகர் விஜயை தம்பி என்ற உரிமையோடு பேசியிருக்கிறார், இதில் அவதூறாக பேசுவதற்கு எதுவுமில்லை. அப்படி இருக்கையில், ரசிகர்கள் இந்தளவுக்கு சென்றதற்கு புஸ்ஸீ ஆனந்த்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆம், ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடந்த கூட்டத்தில் ‘இனிமேல் விஜயை விஜய் என்று அழைக்கக் கூடாது என்றும் தளபதி என்றே அழைக்க வேண்டும்’ என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அரசியலில் ஏற்கனவே ஒரு தளபதி இருக்கும் பட்சத்தில் விஜயை அவ்வாறு அழைக்க சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்? இது விஜய்க்கு குழிபறிக்கும் செயலாகவே புஸ்ஸீ ஆனந்த் செய்துவருகிறார்’என்று சூடுபிடிக்க விவாதம் நடைபெற்று வருகிறது.