என்னை காசு கொடுத்து விஜய் அசிங்கமாக திட்ட விடுகிறார்… விஜயை கைது செய்ய பெண் பிரபலம் பரபரப்பு புகார்..

0
Follow on Google News

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா, டிஜிபி அலுவலகத்தில் நடிகர் விஜய்யை கைது செய்யக் கோரி புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேஸ்வரி பிரியா பேசுகையில், சமீபத்தில் லியோ படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என்கின்ற எந்த ஒரு எச்சரிக்கை பதிவு கூட இல்லாமல், அந்த பாடல் வெளியாகியுள்ளது.

அந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்துமே புகை மற்றும் மது குறித்து வரிகள் இடம் பெற்று இருந்தது, இது இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதிக்கும் வண்ணம் அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது, அந்த வரிகளை நீக்க வேண்டும் என கூறியும், மேலும் விஜய்க்கு சிறுவர்கள் முதல் ரசிகர்கள் உள்ளனர், அவர் ஏன் சற்றும் சிந்திக்காமல் இப்படி செயல்படுகிறார் என நான் பேட்டி அளித்து இருந்தேன். அந்த பேட்டி அதிகம் பேர் பார்த்து இருந்தார்கள்.

அந்த பேட்டியின் விளைவு விஜய் ஒரு பணம் படைத்த நடிகர் என்பதை நிரூபிப்பதற்காகசமூக வலைதளத்தில் பல போலி கணக்குகளை தொடங்க வைத்து ஆபாசமான வீடியோக்கள், ஆபாச வசனங்கள், மிக கொச்சையான பதிவுகளை பதிந்து, என்னை அச்சுறுத்த வைக்கிறார் விஜய். இதற்கு காரணம் நடிகர் விஜய் தான், அனைத்து பதிவுகளுமே விஜயை டேக்ஸ் செய்து தான் அவருடைய ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

அப்படியானால் விஜையிடம் வாங்கிய பணத்திற்கு நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை விஜய்க்கு தெரியப்படுத்துவதற்காக தான், அவருடைய ரசிகர்கள் அனைத்து பதிவுகளிலும் விஜய்யை டேக் செய்கிறார்கள். இதற்கு முன்பு ஆடை என்கின்ற போஸ்டரை தமிழ்நாடு முழுவதும் ஒட்ட விடாமல் தடுத்தது நான் தான், கஞ்சா பூ கண்ணாலே என்கின்ற ஒரு பாடலை எதிர்த்து பேட்டி கொடுத்ததும் நான் தான்.

சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட் குடித்தது போன்ற புகைப்பட வெளியான போது அதை எதிர்த்து பேட்டி கொடுத்தது நான் தான், பல இடங்களில் பல விஷயங்களுக்கு எங்களுடைய சமுதாயம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு தான் வருகிறோம், அந்த நடிகர் இந்த நடிகர் என்பது கிடையாது. அதில் குறிப்பாக விஜய் அவர்களுக்கு சிறுவர்கள் ரசிகர்களாக இருக்கும் பொழுது கூடுதலான தாய் உணர்வு இருக்கத்தான் செய்யும்..

விஜய் சிகரெட் வாயிலே சிகரெட் வைப்பதை பார்த்து ஒரு சிறுவன் இதே மாதிரி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்களால் தடுக்க முடியுமா என ஆவேசப்பட்ட ராஜேஸ்வரி பிரியா, ஒரு பொது தளத்தில் பெண்கள் வருவதற்கு மிகவும் சிரமப்படுவதற்கு காரணம் மோசமான வார்த்தைகள் தான், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், விஜய் ரசிகர்கள் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசுவதற்கு விஜய் தான் பணம் கொடுத்து தூண்டிவிடுகிறார்.

அதனால் நடிகர் விஜய் கைது செய்ய வேண்டும் என ராஜேஸ்வரி தெரிவித்தார், அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் தான் உங்களை பணம் கொடுத்து அவர் ரசிகர்களை ஆபாசமாக திட்ட விடுகிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா என கேட்டதற்கு, என்னிடம் ஆதாரம் இருக்கிறது அதை புகாரில் தெரிவித்துள்ளேன் என பதில் அளித்த ராஜேஸ்வரி, உங்களுக்கு எந்த ஆதார வேண்டுமானாலும் அனுப்புகிறேன் என பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்தார்.

மேலும் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு கோபப்பட்ட ராஜேஸ்வரி உங்கள் அக்கா தங்கையை இது போன்ற ஆபாசமாக பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் நடிகர் விஜய் பணம் கொடுத்து தன்னை ஆபாசமாக திட்ட விடுகிறார் அதனால் அவரை கைது செய்யவேண்டும் என ராஜேஸ்வரி புகார் கொடுத்துள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.