மனைவியால் மண்ணை கவ்வும் விஜய்… தொடர் பிளாப் பின்னணி காரணம் மனைவியின் அட்ராசிட்டி தானாம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு படம் வெளியான முதல் நாளிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் தொடர்ந்து வெளியான 2 படங்கள் படுதோல்வி அடைந்துள்ளது விஜய் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.

இந்த நிலையில் விஜய் படம் தொடர் தோல்விக்கு பின்னணியில், அவருடைய மனைவி சங்கீதா தான் காரணம் என்கின்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் படுதோல்வி, அதனை தொடர்ந்து வாரிசு படுதோல்வி என விஜய் தொடர் தோல்விக்கு பின்னனியில் விஜய் மனைவி சங்கீதா அட்ராசிட்டி தான் காரணம் என கூறப்படுகிறது.

தோல்வி அடைந்த பீஸ்ட் படம் வெற்றி பெற்று விட்டது என விஜய் உட்பட பட குழுவினர் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி கொண்டிருக்கையில், அப்போது விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் பீஸ்ட் படத்தை கழுவி கழுவி ஊத்திய சம்பவம் அரங்கேறியது, அந்த பேட்டியில் அவர் கூறுகையில் இளம் இயக்குநர்கள், பெரிய ஹீரோ கிடைத்த பிறகு , எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற மன நிலைக்கு விடுகின்றனர்.

படத்தில் கதை இல்லாமல் வெறும் 2 பாட்டு , 5 சண்டைக் காட்சிகள் வைத்து இருந்தால் படம் வெற்றிப் பெற்றுவிடும் என நினைக்கின்றனர். ஒரு படத்தின் வெற்றி இயக்குநர் கையில் தான் இருக்கிறது . திரைக்கதையில் ஒரு இயக்குநர் நினைத்தால் தான் மேஜிக் செய்ய முடியும். சர்வதேச அளவில் ஒரு கனமான கதையை நாம் எடுக்கிறோம் என்றால் அதற்கு நிறைய ஆய்வு செய்ய வேண்டும் . நமக்கு ஒரு பெரிய ஹிரோ கிடைத்து விட்டார் என நினைத்து ஷூட்டிங் போக கூறாது என பீஸ்ட் பட இயக்குனருக்கு அறிவுரை தெரிவித்த SA சந்திர சேகர்.

மேலும் முழு கதையைத் தயார் செய்து வைத்த பிறகே ஷூட்டிங் செல்ல வேண்டும் . தற்போது இருக்கும் இயக்குநர்கள் கதையின் லைனை ஹீரோவிடம் சொல்லி , சம்மதம் வாங்கி விடுகின்றனர் . பிறகு திரைக் கதை எழுதும் போது அதில் கோட்டைவிட்டு விடுகின்றனர் . பீஸ்ட் படத்தில் நடிகர் , இசையமைப்பாளர் , ஸ்டண்ட் மாஸ்டர் , டான்ஸ் மாஸ்டர் எடிட்டர் இருக்கின்றனர் . ஆனால் , அதில் ஒரு இயக்குநர் மட்டும் இல்லை ” என விஜய் நடித்த பீஸ்ட் படத்தை அவருடைய தந்தையே கழுவி கழுவி ஊத்தினார்.

இந்த நிலையில் இதற்கு முன்பு விஜய் மற்றும் அவருடைய தந்தை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விஜயின் சினிமா வாழ்க்கையில் தந்தை SA சந்திரசேகர் தலையிடுவது கிடையது. விஜய் தனிச்சையாக மனைவியிடம் ஆலோசனை படி செயல்பட்டு வருகிறாராம். இதற்கு முன்பு விஜய், அவருடைய தந்தையுடன் ஒற்றுமையாக இருந்த காலகட்டத்தில் விஜயின் கதை மற்றும் இயக்குனர்கள் தேர்வு என அனைத்திலும் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆலோசனை வழங்கி முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.

விஜயின் பெரும்பாலான வெற்றி படங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களின் விஜய் கதையைக் கேட்ட பின்பு இது குறித்து அவருடைய மனைவியை சங்கீதாவிடம் தான் ஆலோசனை பெற்று மனைவியின் விருப்பத்திற்க்கு ஏற்ப விஜய் முடிவெடுப்பதாக கூறப்படுகிறது.

அப்படித்தான் இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் பீஸ்டு படம், தற்போது வாரிசு வாரிசு படம் போன்ற படங்களிலும் மனைவியுடன் ஆலோசனை பெற்ற பின்பு தான் கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் மகன் தன்னுடைய ஆலோசனை தற்போது கேட்கவில்லை, மனைவி ஆலோசனைப்படி தான் ஒப்பந்தம் செய்து பீஸ்ட் படத்தில் தோல்வியை தழுவினார் என்கின்ற ஆதங்கத்தில் தான் பீஸ்ட் படம் வெளியான பின்பு தன்னுடைய மனதில் உள்ளதை கொட்டி தீர்த்துள்ளார் SA சந்திரசேகர்.

இப்படி விஜய் தொடர் தோல்விக்கு பின்னணியில் அவருடைய மனைவியின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது தான் என்று கூறப்படுவதால். இனி வரும் காலத்தில் விஜய் தன்னை நம்பியுள்ள ரசிகர்களையும் பணம் கொடுத்து படம் பார்க்க வருகிறவர்களையும் ஏமாற்றாமல், மனைவி தலையீடு இல்லாமல் சிறந்த கதையும், இயக்குனரையும் தேர்வு செய்ய வேண்டும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.