மதிக்காத மிஸ்கின்.. செம்ம டென்ஷனில் விஜய்.. படப்பிடிப்பில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி திரையரங்கங்கள் ஓடிக்கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்த படம் வெளியான உடனே தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக கலந்து கொண்டுள்ளார் நடிகர் விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ மற்றும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் சுமார் ஏழு கேங் ஸ்டார், ஏழு குழுவாக இருக்கிறார்கள், அதில் ஒரு கேங் ஸ்டார் குழுவின் தலைவனாக மிஸ்கின் நடிக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஒரு ரெஸ்ட்ரோ பார் நடத்துகிறார், அந்த ரெஸ்ட்ரோபாரில் மிஸ்கின் வேலை செய்து வருகிறார். இது போன்ற பல சுவாரசியமான தகவல்கள் படத்தை பற்றி வெளியாகி வருகிறது.

இந்தநிலையில், பட குழுவினர் எந்த ஒரு காரணத்திற்காகவும் படத்தின் என்னென்ன படப்பிடிப்பில் என்னென்ன காட்சிகள் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே மிகவும் கட்டுப்பாடுடன் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மிஸ்கின் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் அவர் நடிக்கும் காட்சிகள் அனைத்தையும் வெளிப்படையாக பேசியது லோகேஷ் கனகராஜ்க்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த இயக்குனர் மிஷ்கின் என்பதால் அவரை தட்டிக் கேட்கவும் தயங்குகிறார் லோகேஷ் கனகராஜ்.

அதே நேரத்தில் இந்த விஷயம் விஜய் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து செம்ம டென்ஷனில் உள்ள நடிகர் விஜய். மிஸ்கின் ஒரு அளவுக்கு மேல் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவர் கதாபாத்திரத்தில் வேறு நடிகரை மாற்றிவிட வேண்டும் என்ற அளவுக்கு கோவத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் திடீரென்று மிஸ்கினை அந்த பாத்திரத்தில் இருந்து மாற்றிவிட்டால், இதுவரை மிஷ்கினை வைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் மீண்டும் படமாக்கப்பட வேண்டும்.

மேலும் கதையில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிந்தளவு மிஸ்கின் இடம் இதுகுறித்து பேசி இனிமேல் இது போன்ற தவறுகள் செய்யாமல் இருப்பதற்காக வலியுறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மிஸ்கின் இது போன்று செய்வது தவறு என்பதை அவரே உணர வேண்டும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.