விஜயகாந்த் போன் செய்தும் எடுக்காத விஜய்… நன்றி கொஞ்சம் கூட இல்லையா.?

0
Follow on Google News

விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான சகாப்பதம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விஜய்யை நேரில் சந்தித்து விழாவிற்கு அழைத்த விஜயகாந்த மனைவி பிரேமலதா, நீங்க கண்டிப்பாக வரவேண்டும் என கெஞ்சாத குறையாக கேட்டார், இருந்தும் விஜயகாந்த ஆரம்ப கட்டத்தில் விஜய் சினிமா வளர்ச்சிக்கு செய்து உதவியை கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்காமல், சகாப்தம் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விஜய் வரவில்லை என்கிற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து உண்மை தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது, அதாவது விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு நடிகர் விஜயகாந்த், நேரடியாக விஜய் மற்றும் விஜய் தந்தை SA சந்திரசேகர் இருவருக்கும் தொலைபேசியில் அழைத்துள்ளார், இருவருமே தொலைபேசியை எடுக்கவில்லை.

மீண்டும் விஜயகாந்த் விஜய்யை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்த போது,,விஜய் ஒரு கட்டத்தில் தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார், அப்போது விஜயகாந்த், உங்களுக்கும் தொலைபேசியில் அழைத்தேன், உங்க அப்பாவுக்கு அழைத்தேன் இருவரும் எடுக்க வில்லை, என் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என தெரிவித்த விஜயகாந்த்.

மேலும் விழா அழைப்பிதழில் விஜய் மற்றும் விஜய் தந்தையின் புகைப்படத்தையும் அச்சிட்டு இருந்துள்ளார். ஆனால் விஜயகாந்த் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழிப்பு விடுத்தும் விஜய் வரவில்லை, இந்நிலையில் அப்போது விஜயகாந்த் உடன் இருந்த மீசை ராஜேந்திரன் அந்த இடத்தில் என்ன நடந்தது என நமது தினசேவல் நியூஸ் க்கு கொடுத்த பேட்டியில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் போன் செய்தும் எடுக்காத விஜய்… நன்றி கொஞ்சம் கூட இல்லையா.?