விஜய் சொல்லியும் கேட்க வில்லை… ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து… அந்த டார்ச்சர் தான் காரணமாம்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இருந்து வருகிறார். அத்துடன் நடிகர், பாடகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். சிறு வயது முதலையே முதலே பின்னணி பாடல்கள் பலவற்றை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சொந்த அக்கா ஏ.ஆர். ரைஹானாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள ஜிவி பிரகாஷ் வெயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

தனது 12வது வயது முதல் மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்து வருபவர் தான் சைந்தவி. கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழில் வெளியான விக்ரமின் அன்னியன் திரைப்படத்தில் வந்த “அண்டங்காக்கா கொண்டக்காரி” என்கின்ற பாடலை பாடியது சைந்தவி தான். தொடர்ச்சியாக தமிழ் திரையுலகில் நல்ல பல பாடல்களை பாடியுள்ள அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ’எள்ளுவய பூக்கலையே’, ‘பிறைதேடும் இரவிலே’, ‘கையிலே ஆகாசம்’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை சைந்தவி பாடியுள்ளார். இருவரும் இணைந்து பாடிய பல பாடல்கள் இன்று வரை பலரது ப்ளே லிஸ்ட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதி மனக்கசப்புகள் காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இத்தகவலை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.

மிகவும் தனிப்பட்ட இந்த் மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசுகையில் “ஜிவியும், சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஒழுங்காக பேசிக்கொள்வதில்லை. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஆனால் ஜிவி நடிகராக மாறிய பிறகு சிறிய விரிசல் ஒன்று விழுந்துவிட்டது. அதேபோல் ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்கிறார்.

முக்கியமாக ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர். ஆனால் சைந்தவியின் தாயோ சனாதனத்தை தூக்கி பிடிப்பவர். அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான் அமித் ஷாவை சந்தித்தார் ஜிவி பிரகாஷ். இது அவருக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம். நடிகர் விஜய் உள்ளிட்டோர் பேசியும் இரண்டு பேரும் தங்களது விவாகரத்து முடிவை கைவிடவில்லை” என்றார் சபிதா ஜோசப்.