சமையல் ரூமிலேயே பாத்ரூம் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே…. விஜய்யை வெளுத்து வாங்கிய கே.ராஜன்…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே, படத்தின் ட்ரெய்லர் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. விஜய் படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு எந்தளவிற்கு கொண்டாட்டமோ, அதே அளவிற்கு சிலருக்கு வெறுப்புகளும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

நடிகர் விஜய் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் ஏராளமான அமைப்பினர், கட்சியினர் என்று பலரும் ஏகப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இப்போது லியோ படத்திற்கும் தொடர்ந்து நிறைய எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, நான் ரெடி தான் பாடலில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்ததற்கும், பாடல் வரிகள் மோசமாக இருப்பதாகவும் அவற்றை நீக்கச் சொல்லி பிரச்சினைகள் வந்த நிலையில்,

இப்போது லியோ படத்தின் ட்ரெய்லருக்கும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. லியோ படத்தில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்காக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் அவர்கள் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். கே.ராஜன் பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, ‘ஒரு காலத்தில் சினிமாவில், நாகரீகம் மற்றும் சமூகத்துக்காக படம் எடுத்தார்கள்.

இப்போது 10 சதவீதம் பேர் பணத்துக்காக படம் எடுக்கிறார்கள். 90 சதவீதம் பேர் திரையுலகத்துக்காக படம் எடுக்கிறார்கள். கேடு கெட்டவர்களில் கேவலமானவந்தான் கெட்ட வார்த்தை பேசுவான். சில வார்த்தைகள் இப்போதெல்லாம் புழக்கத்தில் இல்லாத போதிலும், அது சினிமாவில் மீண்டும் வருகிறது. அதை பெரிய ஹீரோ சொல்லும்போது அது மக்களுக்கு எளிதாக கொண்டு போய் சேரும்.

இளைஞர்கள் நம்பிக்கொண்டிருக்கிற அதுவும் தலைவனாக வரப்போகிறவர் என்று நினைக்கும் ஒருவர் இப்படி பேசலாமா?” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். ஒருபக்கம், படத்தில் கெட்டவார்த்தை பேசியதற்காக விஜயை மட்டமாகப் பேசிய கே.ராஜன், மற்றொரு பக்கம் அந்த கெட்டவார்த்தையைப் பேச வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மேடையில், இயக்குனர் லோகேஷ் பற்றி கே.ராஜன் கூறியதாவது:” லோகேஷ் கனகராஜ் அருமையான இயக்குநர். அந்த தம்பி இன்னும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால் இப்படி கேடுகெட்ட கேவலமான வார்த்தை வைத்தால் வாழ்க்கை சரி இருக்காது.” என்று கூறியிருக்கிறார். இவரது பேச்சு எப்படி இருக்குன்னா… ஆடு பகை குட்டி உறவுன்னு சொல்லுற மாறி இருக்கு.. தொடர்ந்து லியோ படம் குறித்து மேடையில் பேசிய கே.ராஜன்,

விஜயின் ரசிகர்கள் சிலர், இதெல்லாம் நடைமுறையில் பேசுவதுதானே என்று கேசுவலாக சொல்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் நடைமுறையில் இப்படி பேசுகிறார்கள். ஏதோ 4 பேர் பேசுவதை 4 கோடி மக்கள் கேட்கும்படி சொல்வியா. வீடுனு ஒன்னு இருந்தால் அதில் பாத்ரூம் என்று ஏன் தனியாக கட்டுகிறார்கள். சமையல் ரூமிலேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.

எங்கே எது இருக்கணுமோ அங்கே அது இருக்கணும் என்பதுபோல் எங்கே எதை பேச வேண்டுமோ அங்கே அதை பேச வேண்டும் என்று விஜயை வார்த்தைகளால் தாக்கியுள்ளார். ஏதோ ஒரு பட நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, லியோ படம் குறித்தும் விஜய் குறித்தும் ஆவேசமாகப் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.