விஜய் ஆண்டனி மகளுக்கு மனஅழுத்தம்… என்ன காரணம் தெரியுமா?

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இவர்களுக்கு மீரா, லாரா ஆகிய இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் மீரா, இளையவர் லாரா. விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தற்போது ரத்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனால் பிஸியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று இரவு தூங்க சென்ற நிலையில் அவருடைய தந்தை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை வீட்டு பணியாளர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.‌ இதையடுத்து மீராவை அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீஸார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகள் மீரா அண்மையில் தந்தை விஜய் ஆண்டனி நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மீராவுக்கு கடந்த சில தினங்களாக மன அழுத்தம் இருந்து வந்ததாகவும் அதற்காக அவர் சிசிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மீரா இந்த விபரீத முடிவை ஏன் எடுத்தார் என தெரியவில்லை. அதிலும் விஜய் ஆண்டனி ரத்தம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நிலையில் அவருடைய அறையிலேயே மீரா தூக்கிட்டுக் கொண்டுள்ளார். மகள் இறக்கும் போது நடிகர் விஜய் ஆண்டனி அவருடைய வீட்டில் இல்லை என்கிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீரா இறந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விஜய் ஆண்டனிக்கு தகவல் தெரியவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

முதல்கட்ட விசாரணையில் மீரா மன அழுத்தத்தில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் ஆண்டனி மகளின் திடீர் மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய விடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், “எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்துகொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும், தற்கொலை எண்ணம் நிறைய பேருக்கு வரும்.சிலருக்கு பணக்கஷ்டத்தால் வரும்.இளம் வயதில் பிள்ளைகள் தற்கொலை முடிவை எடுக்க காரணம் மன அழுத்தம் தான்.அவர்களை எப்போதும் படி படி என சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் லாரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பலர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.